விஜயகுமார் பாரபட்சம் பார்ப்பது ஏன்..? முதல் பொண்டாட்டிக்கு மட்டும் எல்லாமே.. பிரபல நடிகர் கேள்வி..!

விஜயகுமார் பாரபட்சம் பார்ப்பது ஏன்..? முதல் பொண்டாட்டிக்கு மட்டும் எல்லாமே.. பிரபல நடிகர் கேள்வி..!

மிகச் சிறந்த குண சித்திர நடிகரான நடிகர் விஜயகுமார் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை வைத்திருப்பவர்.

இதையும் படிங்க: பூ நடிகையுடன் சிவகார்த்திகேயன் காதல்.. தனுஷ் கூறிய தகவல்..!

 


இவரின் மகன் மற்றும் மகள்கள் சினிமா துறையில் தற்போது ஈடுபட்டு வருவதோடு மட்டுமல்லாமல் இவரின் மூத்த மனைவிக்கு தான் எல்லாம் சிறப்பாக நடந்ததாகவும் ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு என்பது போல் மஞ்சுளா பெற்ற பிள்ளைகளின் நிலைக்கு காரணம் விஜயகுமார் என்று பிரபல நடிகர் ஒருவர் பேசி இருக்கிறார்.

நடிகர் விஜயகுமார்..

நடிகர் விஜயகுமார் நடிப்பில் வெளி வந்த நாட்டாமை திரைப்படத்தை பற்றி சொல்ல வேண்டியதில்லை. இந்த கதாபாத்திரத்தை பக்காவாக செய்திருக்கக் கூடிய இவர் தன் குடும்ப விவகாரத்தில் சிறந்த நாட்டாமையாக இல்லை என்று தான் கூற வேண்டும்.

--Advertisement--

இதற்கு காரணம் இரண்டு பெண்டாட்டி கட்டிக் கொண்ட நடிகர் விஜயகுமார் மூத்த தார பிள்ளைகளை நல்ல முறையில் படிக்க வைத்து டாக்டராக மாற்றியதோடு மட்டுமல்லாமல் அந்தப் பெண்ணின் மகள் தியாவையும் டாக்டருக்கு படிக்க வைத்து அண்மையில் திருமணம் செய்து வைத்திருந்தார்கள்.


இந்த திருமண விழாவில் முறை மாமனாக நடிகர் அருண் விஜய் சிறப்பாக அனைத்தையும் செய்திருந்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

முதல் பொண்டாட்டிக்கு தான் எல்லாமே..

இந்நிலையில் தனது மூத்த தாரத்தின் பெண் பிள்ளைகளை சிறந்த முறையில் கல்வியாளர்களாக மாற்றி சமுதாயத்தில் அந்தஸ்தோடு வைத்திருக்கக்கூடிய விஜயகுமார் இளைய தாரமான மஞ்சுளாவின் மூன்று பிள்ளைகளையும் படிக்க வைக்காதது ஏன்?.

விஜயகுமார் நினைத்திருந்தால் மஞ்சுளாவின் மூன்று பிள்ளைகளையும் நல்ல முறையில் கல்வி கற்க வைத்திருக்க முடியும். ஆனால் அதை செய்ய அவர் தவறுதோடு பாரபட்சம் பார்த்திருப்பதே இதிலேயே தெரிந்துவிட்டது.

கேள்வி கேட்ட பிரபல நடிகர்..

விஜயகுமார் செய்த மிகப் பெரிய தவறு என்று பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் கேள்வி எழுப்பி இருப்பதோடு மட்டுமல்லாமல் மஞ்சுளாவின் மூன்று பெண் குழந்தைகளும் கல்வி கற்காமல் இருந்ததை இவர் கண்டுகொள்ளவில்லையா? என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.


இந்நிலையில் விஜயகுமார் 2 மனைவிகளிடையே பாரபட்சம் பார்த்தது இதன் மூலம் விளங்கியுள்ளதோடு மட்டுமல்லாமல் முதல் பொண்டாட்டிக்கு மட்டுமே எல்லாம் என்று வாழ்ந்து இருப்பதாக தெரிய வந்துள்ளதாக பயில்வான் ரங்கநாதன் பேசியிருப்பதோடு இந்த கேள்வியில் நியாயம் உள்ளது என்றும் கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து பயில்வான் கேட்ட இந்த கேள்வியானது இணையத்தில் வைரலாக தற்போது பரவி வருவதோடு அவர் கேட்ட கேள்வி உண்மையிலேயே நியாயமான ஒன்று தான்.

விஜயகுமார் நினைத்திருந்தால் மூன்று பெண் பிள்ளைகளில் யாராவது ஒருவரை டாக்டராக மாற்றி இருக்கலாம். ஆனால் அதை அவர் செய்ய தவறிவிட்டார் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளது.


இதையும் படிங்க: வீல் சேர்தான் வாழ்க்கை என்றாகி போச்சு.. டிடிக்கு என்ன ஆச்சு.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!

திரைப்படத்தில் மிகவும் சிறப்பான தீர்ப்புகளை வழங்கிய நாட்டாமையால் தன் வீட்டு பிரச்சனையை தீர்க்க முடியவில்லை என்று அவரது ரசிகர்கள் பலரும் ஆதங்கத்தோடு பல்வேறு வகையான விமர்சனங்களை முன் வைத்து இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயம் தான் இணையங்களில் வைரலாக ரசிகர்களால் அதிகளவு பகிரக்கூடிய விஷயமாக உள்ளது.