பள்ளியில் படிக்கும் போதே அது நடந்துடுச்சு.. கூச்சத்துடன் ஒப்புக்கொண்ட விருமாண்டி அபிராமி..!

நடிகை விருமாண்டி அபிராமி தற்போது தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்து இருக்கிறார்.

தொடர்ந்து படங்கள் சீரியல்கள் என ஒப்பந்தமாகி வரும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வேலையையும் செய்து வருகிறார்.

ரசிகர்களின் பார்வையில் நான் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பயணிக்கிறேன். மற்றபடி சினிமாவில் நடித்து அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலை எனக்கு கிடையாது.

ரசிகர்கள் மத்தியில் என்னுடைய முகம் மறந்து விடக்கூடாது என்பதற்காக மீடியா துறையில் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார் நடிகை விருமாண்டி அபிராமி.

விருமாண்டி திரைப்படத்தில் அன்னத்தாயி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். சமீபத்திய பேட்டி ஒன்றில் விருமாண்டி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது என தகவல்கள் வெளியாகிறது.

அதில் அன்னத்தாயி கதாபாத்திரத்தில் நீங்கள் நடிப்பீர்களா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நடிகை விருமாண்டி அபிராமி, அதான் முதல் பாகத்திலேயே அன்னத்தாயி செத்துவிட்டாலே.. பிறகு எப்படி இரண்டாம் பாகத்தில் வர முடியும் என்று கேள்வி கேட்ட த்திரிகையாளர்களை கலாய்த்தார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் பலரும் அவரிடம் பல்வேறு கொக்குமாக்கான கேள்விகளை எழுப்பி வந்தனர்.

அந்த வகையில் பள்ளியில் படிக்கும் போது யாருக்காவது முத்தம் கொடுத்து இருக்கிறீர்களா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகை அபிராமி தயக்கத்துடன் ஆம் என்று பதிலளித்திருக்கிறார்.

இவருடைய இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது மட்டுமில்லாமல் பள்ளியில் படிக்கும் போது யாருக்கு முத்தம் கொடுத்தீர்கள்..? என்று கேள்வி எழுப்பியும் வருகிறார்கள் அவருடைய ரசிகர்கள்.