திருமணமான நடிகருடன் கேரவேனில் தங்கி கிடக்கும் தங்க நடிகை.. அட கொடுமைய..

திருமணமான நடிகருடன் கேரவேனில் தங்கி கிடக்கும் தங்க நடிகை.. அட கொடுமைய..

சினிமாவில் கொஞ்சம் வளர்ந்து விட்டாலே, நடிகைகளின் சகவாசம் சில நடிகர்களுக்கு மிக அவசியமாகிறது. அவர்களை பார்த்து, மார்க் ஆண்டனி படத்தில், எஸ்ஜே சூர்யா கேட்டதை போல பொம்பள ஷோக்கு கேக்குதாடா உனக்கு பொம்பள ஷோக்கு, என்று தான் பலருக்கும் கோபமாக கேட்கத் தோன்றுகிறது.

இளம் நடிகர்

துவக்கத்தில் டிவி சீரியல்கள் சிலவற்றில் நடித்து, பிறகு ரியாலிட்டி ஷோ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி பிறகு சினிமாவுக்குள் வந்தவர் அந்த இளம் நடிகர்.

ரியாலிட்டி ஷோ

ஆரம்பத்திலேயே ஓரிரு படங்கள் நடித்திருந்தாலும், ரியாலிட்டி ஷோவுக்கு போய் வந்த பிறகு நடித்த 2 படங்களும் நல்ல வெற்றியை தந்தன. அந்த இளம் நடிகருக்கும் நல்ல அறிமுகத்தை, வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தன.

இரண்டு ஹிட் படங்கள் மட்டுமே கொடுத்துள்ள அந்த இளம் நடிகர், இப்போதே பல கோடிகளில் சம்பளம் கேட்கிறார். பிரபல பூ நடிகையின் கணவர், காமெடி பட இயக்குநர் தனது படத்தில் நடிக்க இளம் நடிகரை அழைத்த ரூ. 6 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார்.

--Advertisement--

அதிக சம்பளம்

அடுத்து இரண்டு எழுத்து காமெடி நடிகரை ஹீரோவாக்கிய பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான அவர், தனது தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க அந்த இளம் நடிகரை அழைத்த போது அவரிடம் ரூ. 5 கோடி என்றால் சம்மதம் என சொல்லி, இப்படி 2 முக்கிய படங்களில் நடிப்பதை இழந்திருக்கிறார் அந்த இளம் நடிகர்.

இதையும் படியுங்கள்: மஞ்சும்மெல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரம் மீது MeToo குற்றச்சாட்டு.. முதல் பட ஹீரோயின் பகீர் புகார்..!

கேரவன் வேனிலேயே

ஓடிடியில் தாராள கவர்ச்சி காட்டி அசத்திய அந்த நடிகையுடன் ஒரு படத்தில், அந்த இளம் நடிகர் இப்போது நடித்து வருகிறார். இருவருக்கும் படப்பிடிப்பு தளத்திலேயே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆன நிலையில், கேரவன் வேனிலேயே குடும்பம் நடத்தி வருகின்றனர்.

வெளியிடங்களுக்கு சென்றால், விஷயம் லீக் ஆகி விடும் என்பதால், சமீபத்தில் திருமணம் செய்துக்கொண்ட தனது புது மனைவிக்கு தெரியாத வகையில் இளம் நடிகர் கனகச்சிதமாக நடந்துக்கொண்டு அவரை ஏமாற்றி வருகிறார்.

ஹீரோயினுடன் உல்லாசம்

ஷூட்டிங் போகிறேன் என்று கூறிவிட்டு, நேராக கேரவன் வேனை எடுத்துக்கொண்டு தொந்தரவு இல்லாத குறிப்பிட்ட இடத்துக்கு வந்துவிட்டு, வேனுக்குள் அந்த ஹீரோயினுடன் உல்லாசம் காண்கிறார் இளம் நடிகர்.

முதலில் போனில் பேசி பேசி கரெக்டான அந்த ஹீரோயினும், இந்த இளம் நடிகரும் பேசிப் பேசியே காதலை வளர்த்து பிறகு, கேரவன் வேனுக்குள் இப்போது இருவரும் குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: இதுக்காக வேணா விஜய்க்கு டிவிக்கு நன்றி சொல்லிக்கிறேன்.. பிக்பாஸ் சரவணன் ஒரே போடு..

மன்மத லீலைகளை

அந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இளம் நடிகரின் மன்மத லீலைகளை தெரிந்துக்கொண்டு, இதெல்லாம் வேண்டாம் என எச்சரித்தும், நான் குறைந்த சம்பளத்தில் உங்கள் படத்தில் நடிக்கிறேன்.

என் லெவலுக்கு இந்த படத்தில் இந்த சம்பளத்தில் நடிப்பதே தவறு, என் விஷயத்தில் குறுக்கிடாதீங்க என்க, டென்சன் ஆன டைரக்டர், அந்த இளம் நடிகரை படத்தில் இருந்தே தூக்கி விட்டார்.

நெருப்பு இல்லாமல் புகையாது

வளர்ந்து வரும் நடிகர் என்பதால், அவரை பிடிக்காத சிலர்தான் இப்படி வதந்தி கிளப்பி விட்டு, அவரது பெயரை கெடுக்கின்றனர் என்றும் சிலர் கூறுகின்றனர்.

அதே நேரத்தில் நெருப்பு இல்லாமல் புகையாது, அந்த இளம் நடிகர் டிவியில் நடந்த ரியாலிட்டி ஷோவிலேயே அவரது லட்சணம் எல்லாம் தெரிந்ததுதான் என்று பலரும் கூறி வருகின்றனர்.