வேலூர் மாவட்டம் வாலாஜா பகுதியை சேர்ந்தவர் காவ்யா. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமசந்திரன் என்பவருக்கும் கடந்த 2014 திருமணம் ஆகி 4 வயதில் தருண் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார் காவ்யா.
பிறகு, ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்து வந்தார். இதனிடையே நகராட்சி குடியிருப்பு பகுதியில் வசிந்து வந்த தியாகராஜன் என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டு நாட்கள் செல்ல செல்ல கள்ளகாதலாக மாறியது. கணவரை பிரிந்து இருக்கும் காவ்யாவை தன்னுடைய காம வலையில் வீழ்த்தி தனிமையில் சந்திப்பது, உறவு கொள்வது என இருந்து வந்துள்ளார் தியாக ராஜன்.
ஒரு கட்டத்தில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து திருமணமும் செய்து கொண்டுள்ளனர். அதன் பிறகு, 4 வயது மகன் தருண் அவர்களுடைய மகிழ்ச்சிக்கு இடையூறாக இருந்ததால் அவனை
தண்ணீரில் மூழ்கடித்து கொன்றுவிட்டு பிறகு சாக்குப்பையில் கட்டி இரவோடு இரவாக அருகில் இருந்த பாலத்தின் கீழே புதைத்து விட்டு வந்துள்ளான் தியாகராஜன்.
பிறகு, அருகில் இருந்தவர்கள் குழந்தை எங்கே என கேட்கவே, தாய் வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறியுள்ளனர்.
அதனை தொடர்ந்து, காவ்யா வீட்டிற்கு வந்த தாய் குழந்தை எங்கே என கேட்டபோது திருதிருவென விழித்துள்ளனர்.இதையடுத்து காவியா அதே பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் நிகழ்ந்த சம்பவம் குறித்து கூறி சரணடைந்தார்.
இதையடுத்து அவர் போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளார் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காவ்யாவை கைது செய்தனர். போலீசார் வருவதை அறிந்த தியாகராஜன் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார் அவரை தீவிரமாக தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.