நேர்கொண்ட பார்வை - ஒரு டிக்கெட் 1000 ரூபாய் - போலீஸ் ஆதரவுடன் நடக்கும் அட்டூழியம் - ரசிகர்கள் வேதனை


நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள "நேர்கொண்ட பார்வை" படம் உலகெங்கும் வெளியாகி மிகப்பெரிய ஒப்பனிங்கை பெற்றுள்ளது. 

இந்த படத்திற்க்கான டிக்கெட்டுகள் 2-ம் தேதியில் இருந்து, சென்னை, தாம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள முக்கிய திரையரங்குகளில், விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 


இந்நிலையில், காலை காட்சிகள், 7:00 மற்றும் 10:00 மணிக்கும், மதியம், 1:00 மற்றும் மாலை, 4:00 மணிக்கும், இரவு காட்சி, 7:10 மணிக்கும், திரையிடப்பட உள்ளது.இந்நிலையில், படத்திற்கான டிக்கெட்டுகள், அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.


இது குறித்து, ரசிகர்கள் கூறியதாவது:தியேட்டர்களில் வழங்கப்படும் டிக்கெட்டுகளில், அதன் உண்மை விலை, பேனாவால் முழுவதுமாக அழிக்கப்பட்டு, ஒரு டிக்கெட், 350 - 600 ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுகிறது.இதில், காலை, 4:00 மணி சிறப்பு காட்சிக்கு மட்டும், 700 மற்றும் 1000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

இது, தாம்பரம் போலீசார் துணையுடன் நடக்கிறது. படம் பார்க்க வந்த ரசிகர்கள் பலர் டிக்கெட் விலை அதிகம் என்பதால் வேதனையுடன் திரும்பியும் சென்று வருகின்றனர். இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகார்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
Previous Post Next Post
--Advertisement--