நடிகர் அஜித்தின் "நேர்கொண்ட பார்வை" படம் இன்னும் மூன்று நாட்களில் ரிலீஸ் ஆகவுள்ளது. இதனை தொடர்ந்து, படத்தின் ப்ரோமொஷனில் தயாரிப்பு நிறுவனம் கவனத்தை செலுத்தி வரும் நிலையில் படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் ஒரு பேட்டியில் படம் குறித்த சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அவர் கூறுகையில், பிங்க் படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தமான சில கமர்ஷியல் விஷயங்களையும் படத்தில் சேர்த்துள்ளோம். படத்தின் முதல் 25 நிமிடம் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.
இந்த படம் வெளியான பிறகு பெண் சுதந்திரம் பற்றிய பேச்சு நிச்சயம் உருவாகும். இது ஒரு விவாதமாக உருவெடுக்கும். இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. அவை தகர்த்தெறியப்படவேண்டும்.
அந்த கட்டுப்பாடுகளையும் தாண்டி வெளியே வரும் பெண்களை நாம் தவறாக பார்க்கிறோம். அந்த நிலை மாற வேண்டும் என்று கூறியுள்ளார் வினோத்.
Tags
Nerkonda Paarvai