சிம்ரன் 1990-களில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறந்தவர். திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்தார்.சமீபகாலமாக குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
பரமபத விளையாட்டு என்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து வரும் நடிகை திரிஷாவுடன் தற்போது சிம்ரனுடன் இணைந்து நடிக்கவுள்ள படத்துக்கு ‘சுகர்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் அபினய் கதாநாயகனாக நடிக்கிறார்.
சதிஷ், ஜெகபதிபாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் டைரக்டு செய்கிறார். இதில் சிம்ரனும் திரிஷாவும் அக்காள், தங்கையாக நடிக்கின்றனர். இருவரும் தண்ணீருக்கு அடியில் நடக்கும் ஒரு சண்டை காட்சியிலும் விசேஷ பயிற்சி பெற்று நடித்து இருக்கிறார்கள்.
மீண்டும், சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்து விட வேண்டும் என்று நடிகை சிம்ரன் பல முயற்சிகளை எடுத்து வருகிறார். சமூக வலைதளங்களில், எப்போதும் தனது படம் சார்ந்த்த அறிவிப்புகள் மற்றும் சக நடிகர்களுக்கு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளுதல் போன்றவற்றிற்கு மட்டுமே பயன்படுத்தி வந்தார் சிம்ரன்.
ஆனால், இப்போது முதல் முறையாக ஒரு பொது விஷயத்திற்கு பயன்படுத்தியுள்ளார். ஆம், அமேசான் காடுகளில் கடந்த பத்து நாட்களாக பரவி வரும் காட்டுத்தீ குறித்து உலக மீடியாக்கள் எதுவும் கவனம் செலுத்தாமல் மௌனம் காப்பது குறித்து தனது வேதனையை பதிவு செய்துள்ளார்.
'உலகத்திற்கே 20% ஆக்சிஜன் தந்து உலகின் நுரையீரலாக திகழும் அமேசான் காடு தற்போது பற்றி எரிகின்றது. இதை பற்றி ஏன் யாரும் பேசவில்லை, இது மிக முக்கியமான விஷயம்’ என தெரிவித்துள்ளார்.
The "lungs of the planet" are burning.— Simran (@SimranbaggaOffc) August 22, 2019
What can we do more to save the planet?
It's painful to see the forest that creates 20% of the earth's oxygen has been on fire with NO media coverage!!
Tags
Actress Simran