இது ஒரு மணமகள் தேடும் போட்டி. இந்த போட்டியில் வெற்றி பெறுபவரை நான் திருமணம் செய்து கொள்வேன் என கூறி ஆரம்பிக்கப்பட்டு பிறகு அனைத்து போட்டியாளர்களுக்கு அல்வா கொடுத்து அனுப்பிய நிகழ்ச்சி தான் எங்க வீட்டு மாப்பிள்ளை.
பிரபல இளம் நடிகர் ஆர்யா மணமகனாக கலந்து கொண்ட எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி பல சர்ச்சைகளை சந்தித்தது.
போட்டியாளர்களாக கலந்துகொண்ட பெண்களுக்கு ஆர்யா தனக்கு கணவனாக கிடைக்கவில்லை என கண்ணீர் விட்டு அழுத சம்பவங்கள் அந்த பெண்களின் மீது அனுதாபத்தை ஏற்படுத்தியது. பாவம் யாரு பெத்த பொண்ணுங்களோ இப்படி ஒருத்தனுக்காக வந்து அடிசுகிதுங்க என்ற அனுதாபம் தானே தவிர வேறு எதுவும் இல்லை.
அவர் கல்யாணம் செய்து கொள்வதாக கூறி கடைசியில் இறுதி போட்டியாளராக வந்த மூன்று பேரில் ஒருவரை கூட திருமணம் செய்யதால் இது மக்களை ஏமாற்றிய செயல் என நிகழ்ச்சி மீது கடும் அதிருப்தி எழுந்தது.
இதில் அதிகபட்சமாக வருத்தமடைந்தவர்களில் ஒருவர் கேரளாவை சேர்ந்த மாடலிங் பெண் சீதாலட்சுமி. இன்ஸ்டாகிராமில் மிகவும் துடிப்புடன் இருக்கும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.
Tags
Actor Arya