மத்தியில் ஆட்சி செய்து வரும் மோடி அரசு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து அதிரடியாக தீர்மானத்தை நிறைவேற்றியது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த தீர்மானத்தினால் நம் நாட்டின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதற்கு, அரசியல் தலைவர்கள் இருவிதமாக கருத்து தெரிவித்து வந்தாலும் நமக்கு எதுக்கு வம்பு என திரையுலகை சேர்ந்த பிரபலங்களில் ஒருசிலர் மட்டுமே தங்களது கருத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் நடிகை அமலாபால் இந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து இந்திய வரைபடத்தில் காவி நிற தலைப்பாகை கட்டப்பட்டது போன்ற செம்ம மாஸான ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆர்டிகிள் 370 நீக்கப்பட்டது. இது ஆரோக்கியமான, நம்பிக்கையான மற்றும் மிகவும் தேவைப்படும் ஒரு மாற்றம் ஆகும். இதன் மூலம் காஷ்மீர் மக்கள் சிறந்த கல்வி, வளர்ச்சி மற்றும் அமைதியை பெறுவார்கள்.
இந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என நம்புகிறேன். இதனை செய்தது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமல்ல. என்று குறிப்பிட்டுள்ளார்.
அமலாபாலின் இந்த கருத்துக்கு பெரும்பாலனோர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில். சிலர் எதிர்ப்பும்தெரிவித்து வருகிறார்கள்.
#Article370Abolished : IMO it's a healthy, hopeful, and much needed change. It's not an easy task, it takes a courageous leader like our honorable @PMOIndia to implement decisions like these. Praying for peaceful days ahead! #UnityIsPeace #JaiHind 🇮🇳 https://t.co/b1VHZgE1VX— Amala Paul ⭐️ (@Amala_ams) August 5, 2019
Tags
Amala Paul