உலகின் மிகப்பெரிய காடான அமேசான் காடு தற்போது மூச்சு விட முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது. உலக வரலாற்றில் இல்லாத அளவிற்கு தற்போது அங்கு மிகப்பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.கடந்த வாரம் பிரேசில், சாவ் பாவுலோ ஆகிய நாடுகளை திடீர் என்று பெரிய அளவில் கரும் புகை சூழ்ந்தது.
வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த மக்கள் பக்கத்து வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறதோ என்று சோதித்து பார்த்தனர்.ஆனால் அங்கு மட்டுமில்ல, அவர்களின் நாடு முழுக்க பெரிய அளவில் கரும்புகை பரவியது. புகையால் பட்டப்பகல் கூட கொடும் இரவு போல மாறியது.
இந்த கரும் புகைக்கு காரணம் 1700 மைல்கல் தொலைவில் இருக்கும் அமேசான் காடு.தற்போது அமேசான் காட்டில் மிகப்பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் தொடங்கிய இந்த காட்டுத்தீ தற்போது வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது.
கடந்த 6 மாதத்தில் மட்டும் அங்கு மொத்தமாக 73000 காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதில் 90% காட்டுத் தீ இன்னும் அணையவில்லை. நாளுக்கு நாள் அமேசான் காட்டில் காட்டுத் தீ புதிதாக ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.உலகில் மொத்தம் உருவாகும் ஆக்சிஜன்களில் 20% ஆக்சிஜன் அமேசான் மூலம்தான் உருவாக்கப்படுகிறது.
அதேபோல் உலகில் உள்ள விலங்குகளில் 40% விலங்குகள் இந்த காட்டில்தான் இருக்கிறது. இதனால்தான் இந்த அமேசான் காட்டை ''பூமியின் இருதயம்'' என்று குறிப்பிடுகிறார்கள். இதுதான் பூமி வெப்பம் அடைவதை தடுத்து வருகிறது.இது குறித்து நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ள பதிவில்,பூமியின் நுரையீரல் எரிந்துகொண்டிருக்கிறது.
உலகை காப்பாற்ற நாம் இன்னும் என்ன செய்யப்போகிறோம். பூமியில் 20 சதவீதம் ஆக்ஸிஜனை வெளியிடும் காடுகளை எரிவதை பார்க்கையில் மிகவும் வேதனையாக இருக்கிறது.ஏன் இந்த சம்பவம் குறித்து ஊடகங்கள் வாயே திறக்கவில்லை என கோபமாக கேட்டுள்ளார்.