பிக்பாஸ் வீட்டில் கன்டென்ட் கொடுத்துக்கொண்டிருக்கும் போட்டியாளர்களை தொடர்ந்து வெளியேற்றிக்கொண்டே இருக்கிறது பிக்பாஸ் குழு என்ற பேச்சு எழுந்தது.
இந்த வாரம் நாமினேட் ஆனவர்களின் நடிகை ஷாக்சி அல்லது சீரியல் நடிகர் கவின் ஆகியோர் வெளியேற்றப்படலாம் என்று ரசிகர்கள கருதினார்கள்.
ஆனால், யாரு வம்பு, தும்புக்கும் போகாமல் பாதுகாப்பாக விளையாடி வந்த நடிகை ரேஷ்மா-வை இந்த வாரம் வெளியேற்றியுள்ளது பிக்பாஸ் குழு. இப்போதைக்கு, பிக்பாஸ் -இடம் இருக்கும் ஒரே கன்டென்ட் என்னவேன்றான் அது சாக்ஷி-கவின் காதால் சமாசாரம் தான்.
இவர்களில் ஒருவரை வெளியேற்றி விட்டால் பிறகு நிகழ்ச்சி படுத்துவிடும் என்பதால் ரேஷ்மா-வை பலிகாடா ஆக்கியுள்ளது பிக்பாஸ் குழு என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.