எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் உருவான அன்பே ஆருயிரே படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிலா. இவரது இயற்பெயர் மீரா சோப்ரா என்பதாகும்.
அன்பே ஆருயிரே படத்திற்கு பிறகு தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். தொடர்ந்து ஜாம்பவான், லீ, மருதமலை, காளை உள்ளிட்ட படங்களில் நடித்தார் நிலா.
ஆனால், தமிழ் சினிமா ரசிகர்கள் இவரை கண்டுகொள்ளவில்லை. தெலுங்கு பக்கம் சென்று சில படங்களில் நடித்தார். அக்கட தேசத்திலும் செல்ஃப் எடுக்கவில்லை. இதனால், கிக்கரை உதைத்து சலோ நார்த் இண்டியா என பாலிவுட் பக்கம் சென்றார்.
ஹிந்தியில் சில துக்கடா படங்களில் நடித்தார். தொடர்ந்து, சினிமா வாய்ப்பு இல்லாததால் தற்போது “பேஷன் டிரெஸ்” விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இப்போது, நீண்ட இடைவெளிக்கு பிறகு படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
ஹிந்தியில், நஸ்டிக், கலங்க், மொஹாலி புவ்வு, செக்சன் 375 என்ற நான்கு படங்களில் நடித்துள்ளார். இதில், கலங்க் திரைப்படம் மட்டும் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.
பட வாய்புகள் வராமல் போனதற்கு வேறு யாரும் காரணம் அல்ல அவரே தான். கடந்த 2011-ம் ஆண்டு நிலாவின் நெருங்கிய நண்பர் சுமித் என்பவரின் மனைவி ருச்சி என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இதற்கு காரணம், நிலா தான் என்றும் சுமித்-துடன் ஏற்பட்ட கள்ள காதல் காரணமாக தான் ருச்சி கொலைசெய்யப்பட்டார். இந்த கொலையில் நிலாவுக்கு தொடர்பு உள்ளது என புகார் எழுந்தது. இதனால், நிலாவை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்தனர்.
விஷயம் அறிந்த நிலா தலைமறைவாகி விட்டார். தொடர்ந்து, தனது வக்கீல் மூலம் ஹரியான கோர்டில்ஜாமீன் மனுதாக்கல் செய்து முன் ஜாமீன் பெற்றார். இதனால், இவர் கமிட் ஆகியிருந்த படங்களும் இவர்kகையை விட்டு சென்றன. இப்போது, வழக்கு பிரச்னைகள் முடிந்துள்ள நிலையில் மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ளார் அம்மணி.