"நேர்கொண்ட பார்வை" குறித்து "பிகில்" பட தயாரிப்பாளர் என்ன கூறியுள்ளார் பாருங்க..!


"நேர்கொண்ட பார்வை" இசை நிகழ்ச்சி முடிந்தவுடன் 3 ஆண்கள், 3 பெண்கள் ஹோட்டலில் சந்திக்கிறார்கள். அதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய ஒருவரைப் பாட்டிலால் அடித்துவிடுகிறார். 

இதனால் மூன்று ஆண்களும், மூன்று பெண்கள் மீது புகார் அளிக்கிறார்கள். இதில் பெண்களுக்கு ஆதரவாக வாதாடுகிறார் அஜித். ஏன் அந்தப் பெண் அடித்தார், என்ன நடந்தது, சமூகத்தில் பெண்கள் மீதான பார்வை எப்படியிருக்கிறது என்ற பல கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளது 'நேர்கொண்ட பார்வை'. 


இந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'பிங்க்' படத்தின் ரீமேக். ஆனால், அந்தக் கதையை அப்படியே பண்ணாமல், தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களைச் செய்திருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். அந்தக் களத்தோடு இங்கு பெண்களை எப்படி பார்க்கிறோம் உள்ளிட்ட பல அம்சங்களை வசனங்களாக திரைக்கதையில் புகுத்தி அப்ளாஸ் பெறுகிறார்.


உலகம் முழுதும் இன்று வெளியாகியுள்ள இந்த படத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில், பிகில் பட தயாரிப்பாளரும் தனது வாழ்த்துகளை படக்குழுவிற்கு தெரிவித்துள்ளார். 

அவர் கூறியுள்ளதாவது, " அஜித் சாருக்கு வாழ்த்துக்கள். இயக்குனர் வினோத் மற்றும் போனி கபூர் சார் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் ப்ளாக் பஸ்டர் வெற்றி பெற வாழ்த்துகிறேன். படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்." என்று கூறியுள்ளார்.

Previous Post Next Post
--Advertisement--