தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் படம் வேலை நாட்களில் வெளியானால் இப்படியான செய்திகளை நாம் கடந்து வந்து தான் ஆக வேண்டும் போல இருக்கிறது.
ஆம், நேர்கொண்ட பார்வை படத்திற்கு போகணும் லீவு கொடுங்க என பிரபல தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் தனது H.O.D அனுமதி கடிதம் எழுதி வம்பை விலைக்கு வாங்கி கொண்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.
மாணவர் மற்றும் கல்லூரியின் நலன் கருதி இங்கே கல்லூரியின் விபரங்களை மறைத்திருக்கிறோம். நாளை ஆகஸ்ட் 8-ம் தேதி வியாழக்கிழமை அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸ் ஆகவுள்ளது. நாளை வேலை நாள் என்பதால் அஜித் ரசிகர் ஒருவர் தனது துறைத்தலைவருக்கு விடுப்பு வேண்டும் என அனுமதி கடிதம் எழுதியுள்ளார்.
இதனை பார்த்து கடுப்பான துறைத்தலைவர் அந்த வேண்டுகோளை நிராகரித்தது மட்டுமில்லாமல் நாளை வரும் போது பெற்றோர்களை அழைத்து வரும் படி அந்த மாணவனுக்கு அறிவுரை வழங்கி அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பார்பதற்கும், படிப்பதற்கு கேலிக்குரிய விஷயமாக இருந்தாலும் படிக்கும் மாணவர்கள் அப்படி விடுப்பு எடுத்து விட்டு ஒரு படத்தை பார்க்க வேண்டுமா..? எங்கு செல்கிறது நம் இளைய சமுதாயம் என்ற கேள்வி எழுகிறது.
எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்துக்கொண்டு திரியும் மாணவர்கள். தாங்கள் படிக்கும் படிப்பையும் விளையாட்டாகவே எடுத்துக்கொள்கின்றனர். கல்லூரி காலாத்தில்நண்பர்களுடன் அனைத்து விளையாட்டுகளையும் செய்யலாம். பொழுதை போக்கலாம். கொண்டாடலாம்.aஆயிரத்தெட்டு அழிச்சாட்டியங்கள் பண்ணலாம். ஆனால், அவை எதுவும் படிக்கும் படிப்பை கடுகளவும் பாதித்து விடாதபடி பார்த்துக்கொளல் வேண்டும். இதனை இது போன்ற கல்லூரி மாணவர்கள் உணர வேண்டும்.
Tags
Nerkonda Paarvai