இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித், வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ் நடித்துள்ள படத்தை, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரின் பே வியூ புராஜெக்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாக உள்ள படத்தை 1129 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதை தடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளது.
இந்த படம் சம்பந்தப்பட்ட அனைத்துக் காப்புரிமைகளும் தங்கள் வசம் உள்ள நிலையில், சட்டவிரோதமாக இணையதளங்களிலோ அல்லது கேபிள் டிவி-களிலோ படத்தை வெளியிட்டால் அது மிகப்பெரிய மன உளைச்சலையும், பொருளாதார நஷ்டத்தையும் ஏற்படுத்தும் என வாதிட்டார்.
மனுதாரர் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நேர்கொண்ட பார்வை படத்தை இணையதளங்களில் வெளியிடுவதை தடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். ஆனால், அவற்றையும் மீறி "நேர்கொண்ட பார்வை" திரைப்படம் மற்றும் படத்தின் முக்கியமான காட்சிகள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம்kகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் " திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடுவது. சினிமாவையும், அதனை நம்பியுள்ள குடும்பங்களையும் சிதைப்பது போன்றதாகும். தயவு செய்து நேர்கொண்ட பார்வை படத்தினை இணையத்தில் வெளியிடவேண்டாம். படம் சம்பந்தமான காட்சிகளையும் யாரும் பகிர வேண்டாம்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
It is so difficult to make a film and especially releasing it in theatres! So many families are affected by piracy. Piracy is equal to killing cinema and those who are dependent on it!! Pls dont share videos of NKP #SayNoToPiracy #NerKondaPaarvai #nkp— Anjana Rangan (@AnjanaVJ) August 6, 2019