விஜய்-நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள படம் பிகில். அட்லீ இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
தீபாவளியை முன்னிட்டு வருகிற அக்டோபர் 25-ந் தேதி பிகில் படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பல சர்ச்சைகளுக்கு இடம் அளிக்கும வகையில் நடந்து முடிந்தது.
நடிகர் விஜய் வழக்கம் போல அனல் பறக்க பேசிவிட்டு சென்றார். அவர் பேசுகையில், ஒரு திருக்குறளை கூறி அதற்க்கு விளக்கம் கொடுத்தார். யார் யாரை எங்கு வைக்கனுமோ எங்க வைக்கணும் என்று அவர் கூறியது ஆளும் கட்யினரை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனால், கட்டாயம் பிகில் படத்திற்கு பிரச்னைகள் வரும், வம்பை விலைக்கு வாங்குவது எப்படி என்பதை விஜய்யிடம் தான் கற்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று பலரும் கூறுகிறார்கள். அந்த அளவுக்கு சும்மா கிடந்த பிகிலை ஊதி கெடுத்து விட்டார் விஜய் என்பது மறுக்க முடியாத உண்மை.
மீன் வியாபாரிகள் சங்கம் நாங்கள் தெய்வமாக வணங்கும் கறி வெட்டும் கட்டை மீது செருப்பு காலை வைத்து கொண்டு விஜய் அமர்திருப்பது மன உழைச்சலை ஏற்படுதிய்ள்ளது என கிளம்பினர். இந்நிலையில், அரசாங்கமே இப்போது நேரடியாக களத்தில் குதித்துள்ளது. ஆம், ஆடியோ வெளியீட்டு விழா நடந்த சாய் ராம் கல்லூரிக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது உயர் கல்வித்துறை.
எப்படி ஒரு தனியார் கலை நிகழ்ச்சியை கல்லூரியில் நடத்த அனுமதித்தீர்கள். என்று விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பிகில் இசை வெளியீட்டு விழாவின் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஏற்கனவே, அதே சாய்ராம் கல்லூரியில் சர்கார், பேட்ட படங்களின் இசை வெளியீட்டு விழா நடந்த போது கல்வித்துறை என்ன செய்துகொண்டிருந்தது என்ற ஞானமான கேள்வியை விஜய் ரசிகர்கள் முன்னெடுத்துள்ளனர்.