ஆர்.எக்ஸ். 100 தெலுங்கு படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பாயல் ராஜ்புட்.
அவர் உதயநிதி ஸ்டாலினின் ஏஞ்சல் படம் மூலம் கோலிவுட் வந்துள்ளார். ஊரடங்கு உத்தரவால் வீட்டில் சும்மா இருப்பவர்கள் ஏதாவது சவாலை அறிமுகம் செய்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த வாரம் நடிகை ராகுல் பரீத் சிங் தலைகீழாக நின்றபடி டீசர்ட் அணியும் சேலஞ்சை அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து, நடிகை பாயல் ராஜ்புட் "தலையணை சேலஞ்ச்" ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதாவது ஆடைக்கு பதில் தலையணையை உடம்பில் கட்டிக் கொண்டு புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டும். அந்த தலையணை சவாலை பாயல் ராஜ்புட் ஏற்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
என்ன கொடும சரவணன் இது..?


