ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் இந்த நடிகை. தேவலோக அழகிகள் என்று கூறப்படும் மூன்று அழகிகளில் ஒருவர் பெயர் கொண்டவர் இவர்.
இப்போதும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சீரியலில் நடிக்க அழைத்தால் நான் இறக்கும் வரை சினிமா நடிகை தான் என்று கர்வமாக கூறுபவர் இந்த நடிகை.
வயதோ ஐம்பதை தாண்டி விட்டது. இளம் நடிகையாக இருந்த போது அன்றைய ஹீரோக்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர். முப்பது வயதை தாண்டிய பிறகு தான் திருமணமே செய்தார்.
ஆனால், கிட்டதட்ட பத்து வருடங்கள் கணவருடன் வாழ்ந்து விட்டு அவரை விவாகரத்து செய்தார். காரணம் பல கூறப்பட்டாலும் நடிகையிடம் இருக்கும் குடிப்பழக்கம் தான் இந்த விவாகரத்திற்கு காரணம் என்று கூறினார்கள். பொது இடத்தில் குடி போதையில் பல முறை சிக்கியுள்ளார் அம்மணி.
அதன் பிறகு, நாற்பத்தைந்து வயதை கடந்த பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ரசிகர்களை ஷாக் ஆக்கினார். படங்களில் பிசியாக இருந்தாலும் குடிப்பதற்கு மட்டும் தவறுவதே இல்லையாம். இது குறித்து அவரது நலம் விரும்பிகள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் கேட்பதாக தெரியவில்லை.
இப்போது, ஐம்பது வயதை தாண்டி விட்ட நிலையிலும் இப்படி மதுவுக்கு அடிமையாகி கிடக்கும் நடிகையை பார்த்து உச் கொட்டுகிறது கோடம்பாக்கம்.