தற்கொலை செய்து கொண்ட பிரபல சீரியல் நடிகையின் மகன் - என்ன காரணம்..? - அதிர்ச்சி தகவல்..!


புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடிபில் வெளியான ’கண்ணன் என் காதலன்’ ’தலைவன்’ ‘ஊருக்கு உழைப்பவன்’ மற்றும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த ’வசந்த மாளிகை’ ’வாணி ராணி’ ’ரோஜாவின் ராஜா’, ‘உயர்ந்த மனிதன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ.

இவர் தற்போது தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகை வாணிஸ்ரீயின் மகன் வெங்கடேஷ் கார்த்திக் என்பவர் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனை கல்லூரியில் அசிஸ்டன்ட் ப்ரொஃபசராக பணிபுரிந்து வந்தார். 

இவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் சென்னையில் உள்ளனர். இவர் மட்டும் ஊரடங்கு காரணமாக திருக்கழுக்குன்றம் அருகே உள்ள கிராமத்தில் அவருடைய சொந்த வீடு ஒன்றில் சிக்கி கொண்டார். 

வெங்கடேஷ் கார்த்திக் மாதக்கணக்கில் சென்னையில் உள்ள மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க முடியாத ஏக்கத்தில் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. 


இந்த நிலையில் நேற்று அவர் தனது வீட்டின் பின்புறம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

எதற்காக தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு இவர் சென்றார் என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த தகவலை அறிந்த சின்னத்திரை வட்டாரத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

--- Advertisement ---