கற்றது தமிழ், அங்காடி தெரு, கலகலப்பு, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை அஞ்சலி. இவர் தற்போது தமிழ்,தெலுங்கு என்று பிசியாக நடித்து வருகிறார்.
கற்றது தமிழ், அங்காடி தெரு, கலகலப்பு, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை அஞ்சலி. இவர் தற்போது தமிழ்,தெலுங்கு என்று பிசியாக நடித்து வருகிறார்.
இவரும், நடிகர் ஜெய்யும் காதலித்து வந்ததாகவும், பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாகவும் கிசுகிசுக்கள் பரவின. குடும்ப பிரச்னை காரணமாகத் திரைப்படங்களில் தலைகாட்டாமல் இருந்து வந்த இவரது நடிப்பில் சமீபத்தில் பேரன்பு, லிசா போன்ற படங்கள் வெளியாகி தோல்வியை தழுவியது
அதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள் 2 படம் ரிலீஸ் ஆகி பப்படம் போல் நொறுங்கி மண்ணை கவ்வியது. நாடோடிகள் என்ற மக்கள் விரும்பிய படத்தின் தலைப்பை மட்டும் எடுத்துக்கொண்டு தன்னுடைய தனிப்பட்ட அரசியல் விருப்பு, வெறுப்புகளை துப்பி நாடோடிகள் 2 என்று தலைப்பு வைத்து ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து கொண்டார் சமுத்திரகனி.
அஞ்சலி கையில் தற்போது அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளன. ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் அஞ்சலி அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது துளி மேக்கப் இல்லாமல் படுக்கையில் படுத்துக்கொண்டு கண்களை முடிக்கொண்டு இருப்பது போலவும், கண்களை திறந்து கொண்டிருப்பது போலவும் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.




