சூர்யா தனது அடுத்த படத்தில் சுதா கொங்கரா டைரக்ஷனில் ‘சூரரைப் போற்று’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் ஆரம்பிக்கும் போது கதாநாயகியாக தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது தமிழ் திரை உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்படி என்ன இந்த நடிகை செய்து விட்டார் என்று பார்க்கும்போது இவர் அறிமுகமான ‘மகேஷின்டே பிரதிகாரம்’ என்ற படத்தில் ஜிம்ஷி என்ற கேரக்டரை பார்த்து விட்டு தான் சுதா கொங்கரா படத்தில் நடிப்பதற்கு அழைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அவர் அறிமுகமான முதல் படத்திலேயே நூற்றுக்கணக்கான பேர் ஆடிஷனில் தேர்வு செய்யப்படவில்லை இறுதியாக இவரை தேர்வு செய்து அந்தப் படமும் நல்ல வரவேற்பு பெற்றது.
இதில் சுவாரஸ்யமான சம்பவம் என்னவென்றால் அபர்ணா பால முரளி நடித்த முதல் படம் தான் தமிழில் ‘நிமிர்’ என்ற ரீமேக் செய்து வெளிவந்தது அதுவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதைப்பற்றி அபர்ணா பாலமுரளியிடம் கேட்ட போது, ஆடிஷன் தேர்வாகும் எல்லா படங்களுமே சென்டிமெண்டாக தனக்கு நல்ல கதாபாத்திரங்களாக அமைந்து விடும் என்று கூறியுள்ளார்.
இந்தப்படம் சூர்யாவின் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தும் என்று இயக்குனர் கூறியுள்ளார்.அபர்ணா பால முரளி.
**பாப்போம் படம் வந்ததுக்கு அப்புறம்..!


