ஆடையின்றி நடிகை தமன்னா - முகத்தில் வேறு யாரோ கரியை பூசியிருக்காங்க..! - வைரலாகும் புகைப்படம்..!
தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறந்த தமன்னா கேடி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் தமன்னா நடித்த கல்லூரி திரைப்படம் அவருக்கும் பெரும் பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது. தெலுங்கு, இந்தி சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த தமன்னா.
தமிழில் அஜித், விஜய் உட்பட முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்டுவிட்டார்.அதேபோல் பவன் கல்யாண், மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், நாகசைதன்யா, ஜூனியர் என்.டி.ஆர் எனப் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிட்டார்.
பாகுபலி படத்தில் தமன்னா நடித்த அவந்திகா கேரக்டர் அவரது கேரியரையே மாற்றும் படமாக அமைந்தது. ஹோம்லி, கிளாமர் என இரண்டையும் கலந்து கட்டி என்ன தான் நவரசத்தையும் வெளிப்படுத்தினாலும் தமன்னாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் அமையவில்லை.
இதனால், சமீப காலமாக கவர்ச்சியாக நடித்து தன்னுடைய மார்கெட் சரிந்து விடமால் பார்த்துக்கொள்கிறார் அம்மணி. கொரோனா வைரஸ் தொற்று மற்றும் கொரோனா லாக்டவுனால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா உட்பட, உலக நாடுகளின் பொருளாதார நிலை மிகவும் மோசமாகியுள்ளது.
இந்த பொருளாதார நிலை சரியாக இன்னும் ஐந்து முதல் ஆறு ஆண்டுகள் பிடிக்கும் என்கிறார்கள். இதெல்லாம், ஒரு பக்கம் இருக்க, நிறவெறி தாக்குதல், யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடி குண்டு வைத்து கொடுத்த விஷமிகள் என உலக மக்களை மென் மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த நிறவெறிக் கொலைக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளதோடு, அந்நாட்டில் தொடர் போராட்டங்களும் நடந்து வருகின்றன. இதுப்பற்றி நடிகை தமன்னா சமூகவலைதளத்தில் முகத்தில் கருப்பு மையை பூசிய ஒரு படத்தை வெளியிட்டு, ''உங்கள் மவுனம் உங்களைப் பாதுகாக்காது.
மனிதனோ, விலங்கோ ஒவ்வொரு உயிரும் முக்கியம். எந்தவொரு படைப்பையும் அழிப்பது உலகளாவிய சட்டத்திற்கு எதிரானது. நாம் மனிதனாக இருக்க கற்றுக்கொள்வோம். இரக்கத்தை காட்டி அன்பை கடைப்பிடிக்கணும். எல்லா உயிரும் முக்கியம். உலகமே விழித்திடு என பதிவிட்டுள்ளார்.
ஆடையின்றி நடிகை தமன்னா - முகத்தில் வேறு யாரோ கரியை பூசியிருக்காங்க..! - வைரலாகும் புகைப்படம்..!
Reviewed by Tamizhakam
on
June 05, 2020
Rating:
