சமூக வலைத்தளங்கள் மூலம் பல எவ்வளவோ நல்ல விஷயங்கள் இந்த உலகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ் சினிமா பிரபலங்கள் சிலர், தமிழ் சினிமா ஹீரோயின்கள் சிலர் சமூக வலைத்தளங்களை 'சாக்கடை' ஆக்கி வருகிறார்கள்.
நடிகை வனிதா விஜய்குமாரின் மூன்றாவது திருமணத்தை மையமாக வைத்து அவருக்கும் நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோருக்கும் இடையே தரமற்ற கேவலமான சண்டைகள் பேட்டி என்ற பெயரில் நடந்தன.
அதற்கடுத்து கடந்த சில நாட்களாக நடிகை மீரா மிதுன், நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோரையும் அவர்களது மனைவி மற்றும் குடும்பத்தினரையும் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார். அதற்கு அவர்களின் ரசிகர்கள் கடும் எதிர்ப்புகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
இருப்பினும் மீரா மிதுன் விடாமல் தொடர்ந்து வீடியோ பதிவுகளைப் பதிவிட்டு வருகிறார். அவரது கமெண்ட் பக்கத்தில் ரசிகர்கள் மிகவும் கேலமான, தரக்குறைவான கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி கமெண்ட் செய்து வருகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் தற்போது பிரபலங்களே இப்படி கீழ்த்தரமாக வீடியோக்களைப் பதிவிட்டு வருவது பலருக்கும் அதிர்ச்சிகரமாக உள்ளது. சமூக வலைத்தளங்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சாக்கடையாக மாறி வருகின்றது.
அதிலும் நடிகை மீரா மிதுன் பேசுவது எல்லாம் கொடுமை. ஒரு பெண்ணாக இருந்து கொண்டு தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்களான, விஜய் மற்றும் சூர்யா ஆகியோரின் மனைவிகளை வேசி என பேசுவதெல்லாம் ஏற்கவே முடியாத ஒன்று. இதற்கு தண்டனை வழங்க வேண்டும் என்று பலரும் பேசி வருகிறார்கள்.
அது சரி, தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம். ஆம், அந்த புகைப்படத்தில் இருப்பது சாட்சாத் நம்ம "சூப்பர் மாடல்" மீரா மிதுன் தான்.
Tags
meera mithun