வெள்ளித்திரையை தாண்டி, சீரியல்களை இயக்கி சின்னத்திரை ரசிகர்களையும் கவர்ந்தவர், இயக்குனர் சுந்தர்.சி. இவர் பிரபல தொலைக்காட்சிக்கு இயக்கிய திகில் தொடரான 'நந்தினி' அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்தில் இருந்தது.
இந்த சீரியலில், நாயகியாக நடித்திருந்தார் கர்நாடகாவை சேர்ந்த நித்யா ராம். இந்தி சீரியலில் வருவது போல, லோ ஹிப் சாரீ... லோ நெக் ப்ளௌஸ்... என கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் நடித்தார்.
சினிமாவில் நடிக்கும் நடிகைகளை விட சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு மவுசு அதிகம் ஆகி கொண்டிருப்பதை சமீபகாலமாக பார்க்க முடிகிறது. அந்த வகையில் நந்தினி சீரியலில் நடித்த நித்யாராம் செம பேமஸ்.
முதல் முறையாக சினிமா தரத்தில் எடுக்கப்பட்ட சீரியலாக நந்தினி சீரியல் கொண்டாடப்பட்டது. அதில் கவர்ச்சி பொங்க நித்யா ராம் நடித்ததால் இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.சமீபத்தில்தான் நித்யா ராம் இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் சின்னத்திரையில் நடித்துள்ளார்.தற்போது கன்னட மொழியை தொடர்ந்து மலையாளத்தில் ஹீரோயினாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமில்லாமல் நித்யா ராம் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வண்ணம் உள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கவுதம் என்பவருக்கும், நித்யாவிற்கும், தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் திருமணமும் நடைபெற உள்ளது. தற்போது இந்த அழகிய தம்பதிகளின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில், "உடலில் அழகான வளைவு என்றால், அது சிரிப்பு தான். சிரித்துக்கொண்டே இருங்கள்" என்று கூறி தன்னுடைய வளைவு நெழிவுகள் அப்பட்டமாக தெரியும் படி ஹாட்டான போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்துள்ளார் அம்மணி.



