பூந்தமல்லி அருகே தனியார் ஓட்டல் அறையில் தங்கியிருந்த பிரபல டி.வி. நடிகை சித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். மகளின் சாவுக்கான காரணம் குறித்து விசாரிக்குமாறு அவரது தந்தை புகார் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பதிவு திருமணம் செய்து 2 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஹேம்நாத் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சித்ரா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது படப்பிடிப்பு தளத்தில் தகராறு ஏதேனும் நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் ஓட்டல் அறையின் வெளியே இருந்த அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து, அதில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழந்த வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் மற்றும் உறவினர்களுக்கு சம்மன் அளித்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.
தற்கொலையா..? கொலையா..?
இந்த வழக்கை பொறுத்தவரையில், சித்ரா தற்கொலை செய்து கொண்டாரா? கொல்லப்பட்டரா என்பது வலுத்த சந்தேகமாக உள்ளதால், சித்ராவினுடைய நண்பர்கள், உறவினர்களையும் அழைத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்னும் சற்று நேரத்தில் சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யபட்டு இறுதி சடங்கிற்காக அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்படவுள்ளது.
இதனை தொடர்ந்து அவரது வீட்டின் முன்பு பந்தல்கள் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அங்கே அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தே***பையன் அடிச்சே கொன்னுட்டான்
சித்ராவின் உடலை வைக்க அங்கே கொண்டு வரப்பட்டுள்ள ஃப்ரீசர் பெட்டி அருகே அமர்ந்திருந்த அவரது தாய் என் மகள் கில்லி மாதிரி, அவள் தற்கொலை செய்துகொள்பவள் இல்லை. அவள் தைரியமானவள் என்பது உலகத்துக்கே தெரியும். என் மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை, அந்த தே*** பையன் தான் அடிச்சே சாவடிசுட்டான் என்று அழுதபடி கூறிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், அங்கே இருந்த சித்ராவின் அப்பா உடனே அந்த ஃப்ரீசர் பெட்டியின் மீது அமர்ந்து கொண்டு அவரது அம்மா பேசுவதை தடுக்கிறார். மேலும், அந்த ஃப்ரீசர் பெட்டி மீது படுத்துக்கொண்டு சித்ராவின் அம்மாவை பயமுறுத்தும் விதமாக நடந்து கொள்கிறார்.
இதோ அந்த வீடியோ,
இந்த காட்சியை பார்க்கும் போது ஏன் இப்படி இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவர் அடித்து கொன்று விட்டார்கள் என்று அந்த அம்மா சொன்னதும் வந்து எதுவும் பேசவேண்டாம் என கூற வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சித்ராவின் அப்பாவிடமே எதோ மர்மம் உள்ளது. அவரது நடவடிக்கைகள் சித்ராவின் கணவர் ஹேமந்த்-தை காப்பாற்ற வேண்டும் என்பது போலவே உள்ளது என்று கூறி வருகிறார்கள்.