ஓவர் நைட்டில் உச்ச புகழ் அடைந்தவர் தான் மலையாள நடிகை பிரியா வாரியர். ஒரே ஒரு கண்ணடிக்கும் காட்சியின் மூலம் இந்தியா மட்டும் அல்லாமல் பல நாட்டு ரசிகர்களையும் தனது வசப்படுத்தியவர், பிரியா.
தற்போது யாரும் எதிர்பாராத அளவுக்கு ஒரு கவர்ச்சிகரமான புகைபடத்தை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார். திரைத்துறையில் தனக்கான சிறந்த இடங்களை பிடிப்பவர்கள் பலர்.
அதில் சிலர் மட்டுமே ஒரே ராத்திரியில் உலக புகழ் அடைவர். அப்படி ஒரே ராத்திரியில் பலரது கனவு தேவதையாக மாறிப் போனவர், மலையாள நடிகை பிரியா வாரியர். மலையாள படமான “ஒரு அடர் காதல்” படம் மூலமாக அறிமுகமானவர்.
கண்களால் கவர்ந்த கன்னி
ஒரு படத்தின் டீஸர் என்று சொன்னால் நடிகர்கள் தான் அதிகமாக பேசப்படுவார்கள். ஆனால், இந்த டீசரை பார்த்தவர்கள் ப்ரியாவை பற்றி தான் அதிகமாக பேசினர். காரணம், அந்த காந்த கண்கள். மை போட்ட அந்த கண்களை வைத்து அவர் கண்ணடிக்கும் காட்சி அனைவரயும் அவர் பால் ஈர்த்தது.
ஆனால், இந்த படத்திற்கு பிறகு அவருக்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால், அதற்கான தீவிரமான முயற்சியில் இறங்கி தற்போது பாலிவுட் படங்களில் கூட நடிக்க வாய்ப்புகள் கிடைத்து விட்டது அவருக்கு.
அது மட்டும் அல்லாமல் அவர் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் மிகவும் எதிர்பார்க்கும் படம் என்று சொன்னால் அவர் நடித்து கொண்டு இருக்கும் “ஸ்ரீ தேவி பங்களா”.
இந்த படம் மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீ தேவியின் வாழ்கை கதை ஆகும். கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் டீஸர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், சமீபகாலமாக பிரியா வாரியர் எந்த புகைப்படம் வெளியிட்டாலும் அதனை ரசிகர்கள் கலாய்க்க தான் செய்கிறார்களாம்.
கவர்ச்சி கன்னி
பலரது கமெண்டுகள் அவரை டேமேஜ் செய்யும் விதமானதாக தான் இருக்கின்றதாம். அதனால் கடுப்பான பிரியா வாரியர் இவர்கள் நம்மை ரொம்ப தான் கேலி செய்கிறார்கள் என்று நினைத்து சில காலம் தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டை நீக்கி விட்டாராம்.
ஆனால், மீண்டும் பிரியா வாரியர் இன்ஸ்டாவில் தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பழைய காலத்து பாரம்பரிய உடை அணிந்து இருப்பது போல் உள்ளது. கவர்ச்சிகரமான அந்த உடையினை பார்த்து விட்டு ரசிகர்கள் அமைதியாக ஜொள்ளு விட்டு கொண்டு இருக்கின்றனர்.