சீரியல் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நித்யா தாஸா இது....? - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும், ‘கண்ணான கண்ணே’ சீரியலில் நடிகர் பிரித்விராஜின் இரண்டாவது மனைவியாகவும், ஹீரோயின் நிமேஷிகாவின் சித்தியாகவும் நடித்து வருபவர் தான் நித்யா தாஸ். 
 
2007-ம் ஆண்டு, அதாவது தனது திருமணத்துக்குப் பிறகு சீரியல்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார் நித்யா. 
 
சூர்யா டிவி-யில் ஒளிபரப்பான ‘ஐய்யப்பனும் வாவரும்’ என்ற சீரியலில் ஆயிஷாவாக தொலைக்காட்சிக்கு அறிமுகமானார். 
 
 
2009-ம் ஆண்டு சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ‘இதயம்’ சீரியல் மூலம் தமிழுக்கும் அறிமுகமானார். தொடர்ந்து சன் டிவி-யில் ‘காற்றினிலே வரும் கீதம்’, ’பைரவி’, ’அழகு’ ஆகிய சீரியல்களில் தமிழில் நடித்தார். 
 
 
தற்போது ‘கண்ணான கண்ணே’ சீரியலில் ஹீரோயினுக்கு சித்தியாக பாஸிட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 


இந்நிலையில், இளம் வயதில் இவர் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி அவரா இது என்று கேள்வி எழுப்பும் வண்ணம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்