பிக்பாஸ் 5 : இன்று எலிமினேட் ஆனவர் இவர் தான்..! - யாருமே எதிர்பார்க்கவே இல்லையே..!


இம்முறை 16 போட்டியாளர்களும் மக்களுக்கு ஓரளவு அறிமுகம் ஆனவர்களாக இருந்தாலும் வெகு ஜனங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை என விமர்சனமும் எழுந்துள்ளது. இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பெருமளவு அதிகரித்துள்ளது.
 
அவராக இருக்குமோ அல்லது இவராக இருக்குமோ என்று ரசிகர்கள் ஒரு பக்கம் கெஸ் பண்ணி கொண்டு இருந்தாலும் ஓட்டுக்கள் வித்தியாசம் மிகச் சொற்ப அளவில் தான் இருந்து வருகிறது. 
 
ஒரு வழியாக ரசிகர்களின் எதிர்பார்ப்பு படியே இந்த வாரம் எலிமினேஷன் இருக்குமா இல்லை கண்டெண்ட்காக எலிமினேஷனில் ஆளை மாற்றி விடுவார்களா என பலர் குழம்பி வருகின்றனர். 
 
பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோ வாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாளர்களில் யார் உள்ளே இருக்கலாம் யார் வெளியே செல்லலாம் என்று ரசிகர்கள் தான் வாக்களித்து வருகின்றனர். 
 
ரசிகர்களின் வாக்கு அடிப்படையில்தான் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவதற்காக, தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 
 

பலர் ரசிகர்களின் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருப்பதால் தொடர்ந்து இந்த வீட்டில் இருந்து கொண்டு இருந்தாலும் ஒரு சிலர் செய்யும் செயல்களால் இதுவரைக்கும் வாங்கியிருந்த நல்ல பெயர்களை அப்படியே மாற்றி ரசிகர்களுடைய முக சுளிப்புத்கு ஆளாகி விடுகின்றனர். 
 
அது ஒவ்வொரு சீசனிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், நாடியா சேங் என்ற போட்டியாளர் நிகழ்ச்சியை விட்டு இன்று வெளியேற்றப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 
போட்டி தொடங்கி கிட்ட தட்ட இரண்டு வாரம் ஆகிவிட்ட நிலையில், வீட்டில் எங்கு இருக்கிறோம் என்றே தெரியாமல் இருந்த நாடியா-வை தூக்கியடிச்சிட்டாங்களே.. கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.