தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் விவகாரம், அரசியல் மற்றும் திரையுலகை உலுக்கியுள்ளது.
இந்த ஊழல் பணத்தை வெள்ளையாக்க சினிமா துறை பயன்படுத்தப்பட்டதாகவும், இதில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் “நிழல் முதலமைச்சர்” என அழைக்கப்படும் ரத்தீஷ் ஆகியோர் முக்கிய புள்ளிகளாக இருப்பதாகவும் அமலாக்கத்துறை (ED) கண்டறிந்துள்ளது.
இவர்கள் தலைமறைவாக இருக்கும் நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கும் இவர்களுடன் நெருக்கமான தொடர்பு இருப்பதாக பிரபல யூடியூபர் மாரிதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
![]() |
நயன்தாராவுடன் ரத்தீஷ் மற்றும் ஆகாஷ் |
மாரிதாஸின் கூற்றுப்படி, நயன்தாராவும் ரத்தீஷும் கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது குறித்து உரையாடல்கள் நடத்தியதாகவும், இதற்கு ஆதாரமாக அவர்கள் ஒன்றாக எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா-பாகிஸ்தான் பதற்ற நேரத்தில், இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக எந்த நடிகரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என ரத்தீஷ் நயன்தாராவுக்கு கட்டளையிட்டதாகவும், இதனை நயன்தாரா மற்ற நடிகர்களுக்கு பரப்பிய கண்றாவியான விஷயம் நடைபெற்றதாகவும் மாரிதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
![]() |
ரத்தீஷின் வலது கரம் விக்ரம் ஜூஜூவுடன் அட்லீ |
இதனை தேசத்துரோகமாக கருதி, நயன்தாராவை ED விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சுற்றுலா என்ற பெயரில் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை இந்தியாவிற்கு அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும், மாரிதாஸின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை, எனவே இவை யூகங்களாகவே கருதப்படுகின்றன.
ED-யின் விசாரணையில், ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures நிறுவனம் மூலம் சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு ஆகியோருக்கு ரொக்கமாக சம்பளம் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
குறிப்பாக, சிவகார்த்திகேயனுக்கு பராசக்தி படத்திற்காக ரூ.70 கோடி மற்றும் ECR-ல் பிரம்மாண்ட வீடு கட்டப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன. இந்த விவகாரம், சினிமா துறையை கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு பயன்படுத்தியதாக ED குற்றம்சாட்டியுள்ளது.
![]() |
ஆகாஷ், ரத்தீஷ் ஆகியோருடன் நயன்-விக்கி |
உச்சநீதிமன்றம், டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிரான ED விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தாலும், தனிநபர்கள் மீதான விசாரணைகள் தொடர அனுமதித்துள்ளது.
இது, நயன்தாரா உள்ளிட்ட பிரபலங்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரலாம். இந்த விவகாரம், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது, மேலும் சினிமா-அரசியல்-ஊழல் இடையேயான உறவு குறித்த விவாதங்களை தூண்டியுள்ளது.