நண்பன் வீட்டில் மனைவியின் அந்த பொருள்.. மறைந்திருந்து பார்த்த கணவன்.. இறுதியில் அரங்கேறிய கொடூரம்..

புனே : மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள ஒரு பகுதியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. தனது நண்பனின் வீட்டில் மனைவியின் ஹேண்ட் பேக் இருப்பதைக் கண்ட கணவர், சந்தேகத்தின் அடிப்படையில் உண்மையை அறிய முயன்றபோது, கொடூரமான சம்பவம் அரங்கேறியது.

இறுதியில் கணவர் உயிரிழந்த நிலையில் காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் மனைவி மற்றும் அவரது நண்பன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விவரங்கள் வருமாறு: புனேவைச் சேர்ந்த ராஜேஷ் பாட்டீல் (வயது 42) என்பவர் தனது நண்பர் விக்ரம் தேஷ்முக் (வயது 40) உடன் நீண்டகால நட்பு கொண்டிருந்தார்.

ராஜேஷ் தனது மனைவி ஸ்நேஹா பாட்டீல் (வயது 38) உடன் புனே அருகே வசித்து வந்தார். சில மாதங்களாக ஸ்நேஹாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டிருந்த ராஜேஷ், ஒரு நாள் தனது நண்பன் விக்ரமின் வீட்டிற்கு சென்றபோது, அங்கு தனது மனைவியின் ஹேண்ட் பேக் அங்கு இருப்பதைக் கவனித்தார்.

ஏற்கனவே சந்தேகத்தில் இருந்த ராஜேஷ் அதிர்ச்சியடைந்தார். ஆனால் எதுவும் தெரியாதது போல் நடந்துகொண்ட அவர், அங்கிருந்த ஒரு செய்தித்தாளை சிறிதாகக் கிழித்து, மனைவியின் ஹேண்ட் பேக்குக்குள் போட்டுவிட்டு வெளியேறினார்.

நாட்கள் செல்லச் செல்ல, உறுதியான ஆதாரத்தைத் தேடிய ராஜேஷ், மூன்று நாட்களுக்குப் பிறகு தனது வீட்டில் அதே ஹேண்ட் பேக் இருப்பதைக் கண்டார். அதில் தான் கிழித்துப் போட்ட செய்தித்தாள் துண்டு இருப்பதை உறுதி செய்தார்.

இதையடுத்து ஸ்நேஹாவிடம் விசாரித்தபோது, "எனக்கு அங்கு என்ன வேலை? நானே சொல்லப் போகிறேன்" என்று அவர் வெள்ளந்தியாக பதில் அளித்தார். இதனால் மேலும் சந்தேகம் அதிகரித்த ராஜேஷ், நண்பன் விக்ரமிடம் நேரடியாகக் கேட்க மனமில்லாமல் அமைதி காத்தார்.

இந்நிலையில், தனது மனைவியின் செயல்களை உறுதிப்படுத்த ராஜேஷ் ஒரு திட்டம் தீட்டினார். வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி, நண்பர் ஒருவரின் காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு அருகில் நிறுத்தி, காருக்குள் இருந்தபடியே மனைவியின் நடவடிக்கைகளைக் கண்காணித்தார்.

ஒரு வாரம் இவ்வாறு கண்காணித்தும் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், எட்டாவது நாள் அவர் எதிர்பாராத ஒரு காட்சியைக் கண்டார்.

விக்ரம் தேஷ்முக் தனது இரு சக்கர வாகனத்தில் ஸ்நேஹாவை அழைத்துச் செல்வதை ராஜேஷ் பார்த்தார். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற ராஜேஷ், வாகனம் நேராக விக்ரமின் வீட்டிற்குச் சென்றதையும், இருவரும் உள்ளே சென்று கதவைத் தாழிட்டதையும் கண்டார். என்ன நடக்கிறது என்பது தெரியாமல் திகைத்த ராஜேஷ் அங்கேயே மறைந்திருந்தார்.

அப்போது, விக்ரம் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவு டெலிவரி வந்தது. கதவைத் திறந்த விக்ரமைத் தள்ளிவிட்டு ராஜேஷ் உள்ளே ஓடினார். படுக்கையறையில் துணி இல்லாத நிலையில் ஸ்நேஹாவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

"இவனை வெளியே விட்டால் நமது இருவரின் மானமும் போய்விடும்" என்று ஸ்நேஹாவும் விக்ரமும் முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் சேர்ந்து ராஜேஷைத் தாக்கினர். இதில் ராஜேஷ் மயக்கமடைந்து சில நிமிடங்களில் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, சடலத்தை வீட்டில் மறைத்து வைத்திருந்த இருவரும், இரவு 11 மணியளவில் காரில் ஏற்றி அருகிலுள்ள காட்டுப் பகுதியில் வீசிவிட்டு வீடு திரும்பினர்.

அடுத்த இரண்டு மூன்று நாட்கள் அமைதியாக இருந்த ஸ்நேஹா, தனது கணவர் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உறவினர்களிடமும் "கணவர் வந்தாரா? பார்த்தீர்களா?" என விசாரிப்பது போல் நடந்துகொண்டார்.

காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர். ஆனால், 45 நாட்கள் வரை எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில், அந்தக் காட்டுப் பகுதிக்கு அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் விறகு சேகரிக்கச் சென்றபோது, கடுமையான துர்நாற்றம் வீசுவதைக் கண்டு சோதனையிட்டனர். அங்கு உடல் மக்கிய நிலையில் ஒரு சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

விசாரணையில் அந்தச் சடலம் காணாமல் போன ராஜேஷ் பாட்டீல் என்பது உறுதியானது. தீவிர விசாரணையில் இந்தச் சம்பவத்திற்கு மனைவி ஸ்நேஹா மற்றும் அவரது தொடர்பில் இருந்த விக்ரம் தேஷ்முக் ஆகியோரே காரணம் என்பது தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் புனே பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் மேலும் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.

English Summary : In Pune, Maharashtra, a man noticed his wife's handbag at his friend's residence and grew suspicious. While observing their movements, he confronted them at the friend's house. A dispute arose, resulting in the man's death. The body was later found in a forest area. Police investigation led to the arrest of his wife and the friend.
------Advertisement------
------Advertisement------