Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

நீத்து சந்திரா

“ஹிந்தி சினிமாவில் பட வாய்ப்பு வேண்டும் என்றால்…” – விஷால் பட நடிகை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

தமிழில் பல படங்களில் நடித்தவர் நீத்து சந்திரா. மங்காத்தா, பிரியாணி, சிங்கம் 3, திலகர், தீராத விளையாட்டுப் பிள்ளை,  ஆதி பகவன், யாவரும் நலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.  இந்தி படங்களிலும் இவர், நடித்து வருகிறார்.

இந்நிலையில், இந்தி படவுலகில் வாரிசு நடிகர், நடிகைகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக, நீத்து சந்திரா குற்றச்சாட்டு எழுப்பி இருக்கிறார். இதே குற்றச்சாட்டை சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா எழுப்பி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தி படவுலகில், தொடர்ந்து நான் நடிப்பதை தடுக்கவும், என்னை ஓரம் கட்டவும் ஒரு கும்பல் பயங்கரமாக அரசியல் செய்தது. அதன் காரணமாகவே, நான் பாலிவுட் உலகத்தை விட்டு, ஹாலிவுட்டுக்கு சென்று விட்டேன் என்று பிரியங்கா சோப்ரா கூறி இருந்தார். இது உண்மைதான் என, பிரியங்கா சோப்ராவின் கருத்துக்கு கங்கணா ரனாவத், மீரா சோப்ரா போன்ற நடிகைகள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.இதே கருத்தை, தற்போது நீத்து சந்திராவும் அழுத்தமாக கூறி உள்ளார்.

இந்தி படவுலகில், வாரிசுகளாக இருந்தால் எளிதாக படவாய்ப்புகளை பெற்று விடலாம். சினிமா பின்னணி இல்லாதவர்கள், பட வாய்ப்புகளை பெற போராட வேண்டி இருக்கிறது. இந்த நிலமை, எல்லோருக்கும் பிரச்னையாக தான் இருக்கிறது. அதையும் மீறி வாய்ப்பு கிடைத்தாலும், அது மிக மிக தாமதமாக கிடைக்கும் வாய்ப்பாக தான் இருக்கிறது என்றும் நீத்து சந்திரா தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில், நடிகை காஜல் அகர்வால் ஒரு பேட்டியல் தமிழ் சினிமாவில் உள்ள நேர்மை, மரியாதை, தொழில் தர்மம் ஆகிய மூன்று விஷயங்களை இந்தி சினிமா உலகில் பார்க்க முடியாது என வெளிப்படையாக கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

--Advertisement--

தமிழ் சினிமாவை பொருத்த வரை, திறமை இருப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. மிகப்பெரிய இயக்குநர், நடிகர் மகன், மகளாக இருந்தாலும் ரசிகர்கள் அவர்களை ஏற்றுக் கொண்டால் மட்டுமே, அடு்த்தடுத்த படங்களில் வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால், அவர்கள் சினிமா வாய்ப்புகளை விட்டுவிட்டு, வேறு வாய்ப்புகளை தேட வேண்டியதுதான்.

உதாரணமாக, தமிழில் கமல் மிகப்பெரிய நடிகர். அவரது மகள் ஸ்ருதிஹாசன் தமிழ் படங்களில் அதிகமாக நடிப்பதில்லை. தெலுங்கு, இந்தி படங்களில்தான் நடிக்கிறார். மிகப்பெரிய இயக்குநர் பாரதிராஜா மகன் மனோஜ். நடிகராக ஜெயிக்க முடியாமல், அவரும் சமீபத்தில் டைரக்டராகி விட்டார். தமிழில் வாரிசு நடிகர்கள் நடிக்க வந்தாலும் திறமை இருந்தால், ரசிகர்கள் ஏற்றுக்கொண்டால்தான் அவர்கள் தொடர்ந்து நடிக்கலாம். இல்லையென்றால், வேறு தொழில்களை செய்ய வேண்டியதுதான்.

ஆனால், இந்தியில் திறமைசாலிகள் ஒதுக்கப்பட்டு, வாரிசு கலைஞர்களுக்கு வாய்ப்பளிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என, கண்டனம் பலமாக ஒலிக்க துவங்கி இருக்கிறது. இதை இனியாவது பாலிவுட் உலகம் கவனத்தில் எடுத்துக்கொண்டால் நல்லது.

Continue Reading
 

More in

Trending Now

To Top