தெய்வ மகள் சீரியல் மூலம், மக்கள் மத்தியில் பிரபலமானவர் வாணி போஜன் ( Vani Bhojan ). இப்போது சினிமாவிலும் நடித்து, மக்கள் மத்தியல் அதிக வரவேற்பை பெற்றுவிட்டார்.நடிப்பு துறைக்கு வருவதற்கு முன், மாடலிங் துறையில் இருந்தவர் வாணி போஜன்.
பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறார்.விளம்பரங்கள் தந்த வெளிச்சத்தால், வாணி போஜன், விஜய் டிவியில் ஆஹா என்ற சீரியலில் அறிமுகம் ஆனார். அதைத்தொடர்ந்து, ஜெயா டிவியில் மாயா என்ற தொடரில் நடித்தார்.நீலகிரி மாவட்டம் ஊட்டி யை சேர்ந்தவர் இவர், சின்னத்திரை நயன்தாரா எனவும் அழைக்கப்படுவதுண்டு.
Image Source : instagram.com/vanibhojan_/இவர் நடித்த கேரக்டர் பெயரில் அதாவது தெய்வமகள் சீரியலில் இவரது பெயர் சத்யா என்பதால், அந்த பெயரிலும் குறிப்பிடுகின்றனர். வாணிபோஜன், இளங்கலை ஆங்கிலம் படித்தவர்.
சிறந்த நடிகைக்கான சன் குடும்ப விருது பெற்றிருக்கிறார். வாணியின் பெற்றோர் போஜன் மற்றும் பார்வதி. நடிக்க வருவதற்கு முன்பு, கிங் பிஷர் ஏர்லைன்ஸ்சில் பணிப்பெண்ணாக, அதாவது ஏர் ேஹால்டலாக, 3 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார்.
டிவி சீரியல்களை தொடர்ந்து ஒரு இரவு, அதிகாரம் 79, ஓ மை கடவுளே, லாக்கப் போன்ற படங்களில் நடித்திருக்கும் வாணி போஜன், அதே போல் வெப் சீரிஸ் களிலும் இவர் நடித்து வருகிறார். ட்ரிப்லெஸ் என்ற வெப் சீரிஸில் நடித்த போது ஜெய்க்கும், இவருக்கும் காதல் ஏற்பட்டு, சில ஆண்டுகளாக திருமணம் செய்யாமலேயே இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருவதாக, பரபரப்பாக பேசப்பட்டது. சமீபத்தில் இவர்கள் இருவரும் தங்களது எதிர்கால சினிமா வாழ்க்கை, நன்மை கருதி பிரிந்துவிட்டதாகவும் தெரிகிறது.வாணி போஜன், சமீபத்தில் ஒரு நேர்காணலில், கூறியது வைரலாகி வருகிறது.
Image Source : instagram.com/vanibhojan_/கடந்த 2021 ல், பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடித்த பேச்சுலர் என்ற படத்தில் எனக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படம் காதல் படம். படத்தின் கதையை இயக்குநர் சொன்னபோது, அதில் சில நெருக்கமான காட்சிகள் இருந்ததால், அந்த படத்தில் நான் நடிக்க விரும்பவில்லை என்று கூறி விட்டேன். ஏனெனில் அந்த மாதிரியான காட்சிகளில் நடித்தால், மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா, என்ற சந்தேகம் எனக்குள் வந்தது. எனக்காக சில காட்சிகளை மாற்றிக்கொள்வதாக இயக்குநர் விருப்பம் தெரிவித்தும், அந்த படத்தில் நான் நடிக்கவில்லை என்று உறுதியாக கூறிவிட்டேன்.
--Advertisement--
ஆனால், அந்த படத்தில் திவ்யபாரதி சிறப்பாக நடித்திருந்தார். அந்த படத்தின் பாடல்களும் செம ஹிட் ஆனது. அந்த படத்தில் நடிக்க வாய்ப்பை மிஸ் பண்ணிவிட்டேனே, என பிறகுதான் வருத்தப்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.ஆனால், இப்போது பட வாய்ப்புகளுக்காக அம்மணி வாணி போஜன், இன்ஸ்டாகிராமில், அப்டேட் செய்யப்படும் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்தால்,
இந்த கவர்ச்சியை மட்டும் ரசிகர்கள் இப்போது ஏற்றுக்கொள்வார்கள் என்பது, வாணிக்கு எப்படி தெரிய வந்தது எனத் தெரியவில்லை.ஆனால், வாணி போஜன் அன்று பேச்சுலர் படத்தில் கவர்ச்சியாக, நெருக்கமாக நடிக்கமாட்டேன் என்று சொன்னதன் விளைவு, இன்று பட வாய்ப்பு கேட்டு தினமும் பல எல்லை தாண்டிய கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருகிறார் என, ரசிகர்கள் பலரும் கமெண்டில் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.