அந்த ஃபீலிங் குறைஞ்சிடுச்சு.. வயசாகிடுச்சு.. கூச்சமே இல்லாமல் கூறிய ஆண்ட்ரியா..!

அந்த ஃபீலிங் குறைஞ்சிடுச்சு.. வயசாகிடுச்சு.. கூச்சமே இல்லாமல் கூறிய ஆண்ட்ரியா..!

தமிழ் திரை உலகில் பின்னணி பாடகியாக அறிமுகம் ஆன அழகு பதுமையான ஆண்ட்ரியா திரைப்படங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஆண் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகளவு பெற்றவர்.

வயதில் மூத்தவரான இவர் தன்னைவிட வயது குறைந்த இளம் இசையமைப்பாளரோடு லிவிங் டுகதரில் வாழ்ந்து இருந்ததாக இணையங்களில் கிசுகிசுக்கள் எழுந்திருந்தது.

மேலும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டு இருக்கும் காலத்தில் காதலில் விழுந்த இவர் அதில் இருந்து மீள முடியாமல் தன் காதல் தோல்வியால் பல இன்னல்களுக்கு ஆளாகி அதன் பிறகு மீண்டும் சினிமாவின் பக்கம் தன் கவனத்தை செலுத்தி வருகிறார்.

ஆண்ட்ரியா…

சொக்க வைக்கும் சொக்கத்தங்க அழகியாய் திகழும் ஆண்ட்ரியா தற்போது பிசாசு 2 நோ என்ட்ரி, கா, மளிகை என பல படங்களை கைவசம் வைத்து நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை இவர் சரத்குமார், ஜோதிகா நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் சரத்குமாரின் மனைவியாக நடித்து பலரையும் கவர்ந்திருக்கிறார்.இதில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்த ஆண்ட்ரியா தன் காஸ்ட்யூம்ஸ் மூலம் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துவிட்டார்.

செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்துவதை அடுத்து பிரபலமான நடிகையாக ரசிகர்களின் மத்தியில் வலம் வந்த இவர் கமலுடன் விஸ்வரூபம் படத்திலும் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.

மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த தரமணி, துப்பறிவாளன், வட சென்னை, அரண்மனை என்றென்றும் புன்னகை, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

அந்த ஃபீலிங்…

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மெர்சலாகி விடுவார்.

இந்நிலையில் யூடியூப் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கும் நடிகை ஆண்ட்ரியா அந்த ஃபீலிங் குறைஞ்சிடுச்சு.. வயசாகிடுச்சு.. என கூச்சமே இல்லாமல் கூறிய விஷயம் தற்போது வைரலாகி விட்டது.

இதற்குக் காரணம் கல்யாணத்தைப் பற்றி கேட்ட கேள்விக்கு எல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதில் எட்டியவுடன் திருமணம் செய்து விட வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் தற்போது தனக்கு 30 வயதை தொட்ட காரணத்தினால் என்னவோ அது போன்ற எண்ணம் என்னுள் ஏற்பாடாக காரணத்தால் திருமணம் செய்யாமல் இருந்து விட்டேன்.

மேலும் திருமணம் செய்து கொண்ட எல்லோருமே சந்தோசமாக இல்லை என்பது நிதர்சனமாக தெரியக்கூடிய வேளையில் அதற்கு திருமணம் ஆகாமலேயே நாம் சந்தோஷமாக இருந்து விடலாம் என நினைப்பதாக கூறியிருக்கிறார்.

அத்தோடு தற்போது திருமணம் பற்றி எந்த ஐடியாவும் இல்லை என்று கூறிய பதில் ரசிகர்கள் மத்தியில் சோகமான அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இவரின் இது போன்ற பதிலை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் அனைவரும் தற்போது மூட் அவுட் ஆகி விட்டார்கள்.

இன்னும் சில ரசிகர்களும் அந்த எண்ணம் இல்லாதவர்கள் எதற்கு இன்ஸ்டால் பக்கத்தில் படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு தங்களை உசுப்பேற்றுகிறார் என்ற கேள்வியையும் வைத்திருக்கிறார்கள்.

இதற்கான பதிலை நடிகை ஆண்ட்ரியா விரைவில் தெரிவிப்பார் என்ற நம்பிக்கையில் மீண்டும் மீண்டும் அவரது இன்ஸ்டால் பக்கத்தை ஃபாலோ செய்யக்கூடிய ரசிகர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது என்று சொல்லலாம்.