“என்னம்மா… கண்ணு சொருகிட்டு இருக்கு..” – மிதக்கும் படகில் மிதக்கும் அஞ்சலி..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை அஞ்சலி இரவு நேரத்தில் மிதக்கும் படகில் தன் முன்பு விதவிதமான உணவு வகைகளுடன் டைனிங் டேபிள் முன்பு அமர்ந்தபடி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் என்னம்மா.. கண்ணு சொருகிட்டு இருக்கு என்று கலாய் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். காரணம் கண்ணில் ஏதோ தூக்க கலக்கத்துடன் காட்சியளிக்கிறார் நடிகை அஞ்சலி.

ஒழுங்காக தூங்குவது கூட கிடையாது போல தெரிகிறது என்று கூறி முறையான ஓய்வு அவசியம் என்று அவருக்கு அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள். மறுபக்கம் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை அஞ்சலி அதைத் தொடர்ந்து அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தன்னை ஒரு நடிகையாக நிரூபித்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. அதன் பிறகு பல்வேறு படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை அஞ்சலி தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டார் என்று தான் கூற வேண்டும்.

நடிகர் ஜெய்யுடன் காதல் வயப்பட்ட நடிகை அஞ்சலி.. அவரை காதலிப்பதற்கே எனக்கு நேரம் போதவில்லை.. எனவே படங்களில் நடிக்கவும் எனக்கு நேரமில்லை என்று சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கி விட்டார்.

சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அதே ஓட்டத்தில் பயணிப்பது தான் சரியான விஷயமாக இருக்கும் ஆனால் அப்படி செய்யாமல் திரைப்படங்களிலிருந்து ஒதுங்கி சில காலம் ஆள் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் இருந்தார் நடிகை அஞ்சலி.

வருடத்திற்கு மூன்று நான்கு படங்களில் நடித்து வந்த இவர் தான் காதல் வயப்பட்ட 2018-19 ஆம் படங்களில் பெயர் சொல்லும் படி எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

அதன் பிறகு காதல் முறிவுக்கு பிறகு நிசப்தம் என்ற ஹீரோயின் சென்ட்ரிக் திரைப்படத்தில் மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் இவருக்கு வருவது கிடையாது.

தற்போது மலையாளத்தில் இரட்டை என்ற திரைப்படத்திலும் தெலுங்கில் நடிகர் ராம்சரண் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய திரைப்படம் ஒன்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த திரைப்படம் இயக்குனர் சங்கர் மற்றும் கார்த்திக் சுப்பாராஜ் இணைந்து இணைந்து உருவாக்கிய திரை கதையில் இருவரின் இயக்கத்திலும் வெளியாக இருக்கிறது.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கிட்டத்தட்ட 200 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கும் அடிக்கடி அஞ்சலி தொடர்ந்து நடக்கும் அதற்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.