நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவை பொறுத்தவரை கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் வெப் தொடர்களிலும் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.
மேலும் இப்போது இவர் ஏழு கடல் ஏழுமலை என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.இந்த திரைப்படத்தைராம் இயக்க நிவின் பாலி, சூரி போன்றவர்கள் நடித்துள்ளனர்.
இந்தப் படம் இன்னும் வெளிவராத நிலையில் நடிகை அஞ்சலி இந்தப் படம் தனக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் மூலம் தனது மார்க்கெட் கடுமையாக எகிரும் என்ற நம்பிக்கையில் அவர் படம் வெளிவரும் நாளை எதிர்பார்த்து இருக்கிறார்.
மேலும் இனி நடிக்கக்கூடிய படங்களுக்கு இவர் சம்பளத்தை அதிகளவு உயர்த்தி இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. குறிப்பாக இனி இவர் நடித்த கொடுக்க கூடிய அடுத்த படங்களுக்கு சுமார் ஒரு கோடிக்கு மேல் இவர் சம்பளத்தை கேட்டிருப்பதாக கூறியிருக்கிறார்கள்.
--Advertisement--
இதனை அடுத்து தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலகத்தைச் சார்ந்தோர் இவ்வளவு சம்பளமா? என்று வாயை பிளந்து இருப்பதோடு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து விட்டார்கள்.
அந்த வகையில் அஞ்சலி நடிப்பில் வந்த தி ஃபால் வெப் சீரிஸ் கூட நல்ல வெற்றியை தராத நிலையில், ஒரு விரலை காட்டி… 1 கோடி சம்பளம் வேண்டும்.. ஒகே வா என்று கேட்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து இது போல நடிகைகள் அதிக அளவு சம்பளத்தை எதிர்பார்ப்பதால் தயாரிப்பாளர்கள் தலையில் துண்டை போட்டுக் கொண்டு தான் செல்ல வேண்டிய நிலை உருவாகும் என்று அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.
இதனை அடுத்து நிலைமையை உணர்ந்து அஞ்சலி தனது சம்பளத்தை எப்போதும் போல் குறைத்துக் கொள்ளுவாரா அல்லது கூட்டுவாரா என்பது இனி நடிகை இருக்கும் படங்களை பொறுத்து தான் தெரியவரும்.
இதுவரை காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறலாம். மேலும் ஏழு கடல் ஏழு மலை படம் இவரின் சம்பள உயர்வை கட்டுப்படுத்துமா? அல்லது எகிற வைக்குமா? என்பது படம் வெளியான பின் அனைவருக்கும் தெரிந்து விடும்.
[irp posts=”64488″ ]