நடிகை அஞ்சலி ரகசிய திருமணம்..? - மாப்பிள்ளை யாரு… கண்ணீர் விட்ட அஞ்சலி..!

நடிகை அஞ்சலி ரகசிய திருமணம்..? – மாப்பிள்ளை யாரு… கண்ணீர் விட்ட அஞ்சலி..!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் ஒரு சில நடிகைகள் மட்டுமே ரசிகர்களின் மனதில் நின்று விடுகின்றனர். அந்த வகையில் நடிகை அஞ்சலியும் ஒருவர்.

இயக்குநர் ராம் இயக்கத்தில் கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அஞ்சலி கவனிக்கப்பட்டார். அந்த படமும் ரசிகர்களை கவர்ந்தது.

தொடர்ந்து இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் நடிகை அஞ்சலி நடித்த படம் அங்காடித் தெரு. சென்னையில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் ஊழியர்களின் அவல நிலையை சொன்னது இந்த படம்.

ரசிகர்கள் மத்தியில் அங்காடித் தெரு மிகப்பெரிய வரவேற்பை, வெற்றியை பெற்றது. அஞ்சலிக்கு இந்த படம் திருப்புமுனையாக அமைந்தது.

அஞ்சலி..

அடுத்து அஞ்சலி நடித்த படம் எங்கேயும் எப்போதும் படத்தில் அஞ்சலி நடிப்பு மிக அற்புதமாக இருந்தது. இதில் அவரது அழகும் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தது.

நடிகர் ஜெய், அஞ்சலி ஜோடிப் பொருத்தம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. போலீஸ் மகளான அஞ்சலி, அப்பாவி ஜெய்யை காதலிக்கும் காட்சிகள் மிக யதார்த்தமாக ரசிக்கும்படி இருந்தன.

தொடர்ந்து மங்காத்தா, இறைவி, கலகலப்பு என சில படங்களில் நடித்த அஞ்சலி திடீரென காணாமல் போனார். சில தெலுங்கு படங்களிலும் நடித்தார்.

ஒருகட்டத்தில் நடிகர் ஜெய்யுடன் லிவிங் டூ ரிலேசன்ஷிப்பில் அஞ்சலி ஒன்றாக இருப்பதாக தகவல் பரவியது.

அதன்பிறகு தொழிலதிபர் ஒருவரை அஞ்சலி திருமணம் செய்துக்கொண்டார். அமெரிக்காவில் போய் செட்டிலாகி விட்டார் என்ற தகவலும் பரவியது.

இதற்கிடையே உடல் எடை அதிகரித்திருந்த அஞ்சலி, எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறியிருந்தார்.

ரகசிய திருமணம்..?

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை அஞ்சலி, தனது திருமண வதந்திகள் குறித்து வெளிப்படையாக சில விஷயங்களை அவர் பகிர்ந்து இருந்தார்.

நான் முதலில் நடிகர் ஜெய்யை காதலிப்பதாக வதந்தியை பரப்பி விட்டனர். அதன்பிறகு தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்துக்கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டதாகவும் கூறினர்.

எனக்கே தெரியாமல் எனக்கு திருமணம் ஆனதை நினைத்து நிறைய முறை அழுதிருக்கிறேன், என்று அந்த நேர்காணலில் அஞ்சலி கூறியிருக்கிறார்.

நடிகை அஞ்சலி ரகசிய திருமணம் செய்து கொண்டார், அவர் அமெரிக்கா மாப்பிள்ளை என்று வதந்தி கிளம்பியதால் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார் அஞ்சலி.

அதை இந்த நேர்காணலில் கூறி வருத்தப்பட்டு இருக்கிறார் அஞ்சலி.