42 வயதில் நடிகை அனுஷ்கா திடீர் திருமணம்..? மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..!

42 வயதில் நடிகை அனுஷ்கா திடீர் திருமணம்..? மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..!

வாடி வாடி நாட்டுக்கட்டை என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நல்ல உயரத்தோடு அரபிய குதிரையைப் போல காட்சி அளிக்கும் நடிகை அனுஷ்கா இன்று வரை முரட்டு சிங்கிளாகவே வாழ்ந்து வந்திருக்கிறார்.

42 வயதாகி இருக்கும் நடிகை அனுஷ்கா இது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த இவர் திடீர் என்று திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவரை திருமணம் செய்து கொண்ட அதிர்ஷ்டசாலி மாப்பிள்ளை யார் என்று இந்த பதிவில் விரிவாக நாம் தெரிந்து கொள்ளலாம்.

நடிகை அனுஷ்கா..

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் அனுஷ்கா செட்டி 2005 ஆம் ஆண்டு நாகார்ஜுனாவுடன் இணைந்து நடித்து வெளி வந்த சூப்பர் எனும் தெலுங்கு திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இதனை அடுத்து 2006 ஆம் ஆண்டில் ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார்.


சிறப்பான நடிப்பை ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்திய இவர் ஒரு சராசரி கவர்ச்சி நாயகியாக ரசிகர்களின் மத்தியில் வலம் வந்ததோடு அருந்ததி திரைப்படத்தில் அற்புத நடிப்பை வெளிப்படுத்தி தனக்கு என்று ஓர் அந்தஸ்தை பெற்றுவிட்டார்.

இதனை அடுத்து திரைக்கதையில் முற்றிலும் மாறுபட்ட அம்சங்கள் நிறைந்த கதை அம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வரக்கூடிய இவர் அண்மைக்காலமாக திரைப்பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருக்கிறார்.

மேலும் பாகுபலி திரைப்படத்தில் தேவசேனாவாக நடித்து அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் பிரபாஸை தீவிரமாக காதலித்து வருவதாக தகவல்கள் கசிந்து வந்த நிலையில் நடிகர் பிரபாஸ் வீட்டில் இவரது திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்ற விஷயமும் தெரிய வந்தது.

திடீர் திருமணம்..

இந்நிலையில் 42 வயதை கடந்திருக்கும் அனுஷ்கா தற்போது வரை திருமணம் ஆகாமல் சிங்கிளாகவே இருந்து வருகிறார். இந்நிலையில் அடிக்கடி அனுஷ்கா கல்யாணம் என்பது போன்ற செய்திகள் அடிக்கடி இணையங்களில் இறக்கை கட்டி பறக்கும்.


இதனை அடுத்து அந்த செய்திகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும். இந்நிலையில் தற்போது அனுஷ்கா திடீரென திருமணம் செய்து கொண்டிருப்பதாக வெளி வந்திருக்கும் செய்திகள் ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் இவர் தற்போது பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என இன்றைய அக்கட தேசத்து ஊடகங்கள் செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருக்கிறது.


இதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமா வட்டாரத்தில் இந்த நிகழ்வு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எனினும் இன்னும் அனுஷ்கா தரப்பில் இருந்து இது குறித்து எந்த விதமான மறுப்போ அல்லது அறிவிப்போ வெளி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இது போல செய்திகள் அடிக்கடி இணையத்தில் பரவி கடைசியில் புஷ்பவனமாய் மாறி விடுவது வாடிக்கையாகிவிட்ட நிலையில் இந்த செய்தியும் அப்படி தான் இருக்கும் என எந்தவித பதட்டமும் இல்லாமல் பேசி வருகிறார்கள்.

எனவே இது குறித்து உண்மை நிலை தெரிய வேண்டும் என்றால் அதை பற்றி அனுஷ்கா கூறினால் மட்டுமே விளங்கும் என்பது தெளிவாகிவிட்டது.