ஒரு வீடு.. ஒரே ஒரு ஓடு.. அபர்ணா தாஸ் காமெடியை கேட்டு கடியான ரசிகர்கள்..!

மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கும் மிகச்சிறந்த சீரியஸான நடிகை தான் அபர்ணா தாஸ். இவர் மலையாள படங்களில் மிகத் திறமையாக நடித்ததின் மூலம் தென்னிந்திய படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது.

அபர்ணா தாஸ்..

நடிகை அபர்ணாதாஸ் மலையாளத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த Njan Prakashan என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

அடுத்து இவரது சிறப்பான நடிப்பை பார்த்து தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் தமிழில் பீஸ்ட், டாட்டா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இது வரை நான்கு மலையாள படங்களிலும் இரண்டு தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார்.

மொத்தமே ஆறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு தென்னிந்திய திரை உலகில் அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.


சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் புது வீடு ஒன்றினை கட்டி இருக்கிறார். அந்த வீட்டினை ஆரம்பிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடு முடிந்த நிலையில் இருக்கும் புகைப்படம் இரண்டையும் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டுகள் பெற்றிருக்கிறார்.

--Advertisement--

இதனை அடுத்து டாட்டா படத்தில் நடிக்கும் போது கவிநோடு இணைந்து நடித்த அனுபவங்களையும் கவின் மூலம் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது என்பதையும் அபர்ணாதாஸ் கூறியிருக்கிறார்.

லிப்ட் படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த நடிகர் கவின் பிக் பாஸ் சீசனிலும் கடந்து கொண்டிருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

ஒரு வீடு.. ஒரே ஒரு ஓடு.. கடி ஜோக்..

இந்நிலையில் இவரது நடிப்புக்கு பல படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

அந்தளவு இவர் கடந்த படங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில் நடிகை அபர்ணாதாஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் நகைச்சுவையை கூறுகிறேன் என்று ரசிகர்களை கடி ஜோக்கால் காண்டாகிவிட்டார்.

இப்படி ஒரு ஜோக்கை இவர் சொல்லுவார் என்று எந்த ரசிகர்களும் எதிர்பார்க்கவில்லை. அப்படிப்பட்ட மொக்கையான ஜோக்கை சொல்லி அனைவரையும் வாய் கிடைக்க வைத்து விட்டார்.


இந்த ஜோக்கில் இவர் சொன்ன கேள்வியானது ஒரு வீடு.. ஒரே ஒரு ஓடு.. என இருக்கும் வீட்டில் எத்தனை மழை பெய்தாலும் நனையாது அது எப்படி? என்ற கேள்வியை தான் கேட்டு இருக்கிறார்.

இதை அடுத்து அனைவரும் இதற்கான பதில் என்ன என்ற யோசித்த வேளையில் தொகுப்பாளருக்கு கடியான பதிலை அபர்ணாதாஸ் தந்திருக்கிறார்.

அந்த பதிலில் அபர்ணாதாஸ் ஒரே ஒரு ஓட்டு தானே இருக்கிறது அதை ஒரு கவர் வைத்து மூடிவிட்டால் எத்தனை மழை பெய்தாலும் அது நனையாது என்று கூறி இருக்கிறார்.

இதனை அடுத்து இந்த மொக்கை காமெடிக்கு இதுதான் சரியான விடை என்று தொகுப்பாளர் கூறுகிறார். இதைக் கேட்டு ரசிகர்கள் அனைவரும் அட.. இப்படி ஒரு காமெடியா? என்று ரணகளப்படுத்தி விட்டார்கள்.

நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள் இது நகைச்சுவையா? இல்லை கடியா என்பது உங்களுக்கே தெரிகிறது அல்லவா.இனியாவது அபர்ணாதாஸ் இதுபோன்ற கடி ஜோக்குகளை சொல்லாமல் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி இருக்கிறார்கள்.