ரொம்ப தூரமா கூட்டிகிட்டு போய் அதை கேப்பாங்க.. பணத்துக்காக ஓகே.. ரகசியம் உடைத்த நடிகை அர்ச்சனா..!

சினிமாவில் நடித்து பெரிய அளவில் பெயர், புகழ் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் பல பெண்கள் சினிமா துறைக்கு வருகின்றனர். அதுவும் நல்ல முகலட்சணமும், அழகும், கவர்ச்சியான உடல் தோற்றம் கொண்டவர்கள், எப்படியும் சினிமாவில் நடித்து, பெரிய நடிகையாக வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்ற ஆசையில் நான் சினிமாவுக்குள் வருகின்றனர்.

ஆனால், ஒரு கட்டத்தில் அவர்களால் சினிமாவில் கதாநாயகி வாய்ப்பை பெற முடிவதில்லை. கதாநாயகியாக வாய்ப்பு தருவதாக கூறி, பல பெண்களை சினிமாத்துறை சார்ந்த சில இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அவர்களை ஏமாற்றி விளையாடி விடுகின்றனர்.

சினிமாவில் வாய்ப்பு தேடும் பெண்கள்

குறிப்பாக வாரிசு நடிகைகள், வாரிசு நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் தடபுடலாக வரவேற்பு இருக்கிறது. அவர்கள் வெகு எளிதாக படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெறுகின்றனர். பெரிய அளவில் முன்னணிக்கு வந்து விடுகின்றனர்.

ஆனால், புதுமுகமாக சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல், சினிமா பிரபலங்களின் எந்த தொடர்பும் இல்லாமல், புதிதாக சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வருபவர்களுக்கு பெரிய வரவேற்பு என்பது இருக்காது.

அதே நேரத்தில் மிக அழகான பெண்கள், முகலட்சணம் கொண்டவர்கள் உடல் தோற்றத்தில் கவர்ச்சியான பெண்கள் வரும்போது, அவர்களுக்கு வாய்ப்பு தருவதாக கூறி, சில தயாரிப்பாளர்கள் சில இயக்குனர்கள் சில நடிகர்கள் அவர்களை தனியாக அழைத்துச் சென்று தனியறையில் வைத்து, பதம் பார்த்து விடுவார்கள்.

தன்னை வேட்டையாடியதை வெளியே சொல்ல முடியாத நிலையில், சினிமா வாய்ப்புக்காக அவர்களை நம்பியே ஆக வேண்டிய சூழலில் அவர்கள் அதை ஏற்றுக்கொள்வது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

சின்ன சின்ன ரோல்களில் நடிக்க வாய்ப்பு

அதன் பிறகு அவர்களில் ஒரு சிலர் மனிதாபிமான அடிப்படையில், ஏதேனும் ஓரிரு படங்களில், சில காட்சிகளில் நடிக்க வைத்து அவர்களை சந்தோஷப்படுத்துவார்கள். அப்படி நடிக்கும் போது, அவர்களது நடிப்பு பிடித்துப் போகும் பட்சத்தில், இயக்குனர்கள் அவர்களை துணை நடிகைகளாக ஏற்றுக் கொண்டு மீண்டும் மீண்டும் நடிக்க வாய்ப்பு கொடுப்பதுண்டு.

ஆனால் சிலர், நடிப்பு வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளை நன்றாக பயன்படுத்திவிட்டு, வாய்ப்பு தருவதாக கூறிக் கூறியே பல ஆண்டுகள் ஏமாற்றி விடுவார்கள். இப்படி ஏமாந்த பெண்களும் நிறைய பேர் உண்டு.

இதையும் படியுங்கள்: இதுவரைக்கும் இந்த மாதிரி உடலுறவு பண்ணது இல்ல.. சலித்துக்கொள்ளும் ஓவியா.. பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

அங்கீகாரம் இருக்காது

பொதுவாக துணை நடிகைகளாக சின்ன சின்ன ரோலில் நடிப்பவர்களுக்கு டைரக்டர்களோ, தயாரிப்பாளர்களோ பெரிய அளவில் மரியாதையோ அங்கீகாரமோ தர மாட்டார்கள்.

நடிக்கும் இடத்துக்கு வரும் வரை, அவர்கள் கேரக்டர் என்ன, என்ன காட்சியில் நடிக்க வேண்டும், எப்படிப்பட்ட சீன் என்பதை எல்லாம் சொல்ல மாட்டார்கள். நாளை சூட்டிங் வந்து விடுங்கள் என்பது மட்டுமே அவர்களது தகவலாக இருக்கும்.

அந்த இடத்துக்கு சென்ற பின்தான் என்ன கேரக்டர், என்ன மாதிரியான ட்ரஸ், எந்த காட்சியில் நடிக்க வேண்டும் என்பதே தெரிய வரும்.

அதுபற்றி துணை கதாபாத்திரங்களின் நடித்து வரும் நடிகை அர்ச்சனா, சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். இவர் சிந்து சமவெளி, நாடோடிகள், முத்தின கத்திரிக்கா உள்ளிட்ட படங்களில், சில காட்சிகளில் நடித்த துணை நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

துணை நடிகை அர்ச்சனா

அர்ச்சனா கூறியிருப்பதாவது, பொதுவாக திரைப்படங்களில் துணை நடிகையாக நடிக்கும் போது, படப்பிடிப்பு இந்த இடத்தில் நடக்கிறது என்று கூறி விடுவார்கள். அந்த இடத்திற்கு நடிகைகள், பின்னணி நடன கலைஞர்கள் ஆகியோர் நீண்ட தூரம் பயணித்து செல்ல வேண்டிய நிலை இருக்கும்.

ஆனால், அப்படி கஷ்டப்பட்டு சென்ற பிறகு அங்கு வைத்து குட்டியான உடைகளை அணிந்து கொண்டு, நடனம் ஆட வேண்டும் என்று கூறுவார்கள்.

இதையும் படியுங்கள்: அது மாதிரி நேரத்தில் நைட் டேட்டிங் போவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக பேசிய நடிகை சினேகா..!

பணத்துக்காக ஓகே

இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வந்தது எல்லாம் வீணாகி விடுமோ என்ற நினைப்பில் சிலர் சம்மதம் சொல்வார்கள். சிலர் பணத்திற்காக ஓகே சொல்வார்கள்.

குடும்ப சூழல்…

அவர் அவர்களுடைய குடும்ப சூழ்நிலை என்பது, அவரவருடைய பிரச்சனை என்பது அவர்களுக்குத் தான் தெரியும். குடும்ப சூழலை கருத்தில் கொண்டு குட்டியான உடைகளை அணிந்து கொண்டு நடனமாட சம்மதம் தெரிவித்து இருப்பார்கள்.

இன்னும் சிலர் இப்படியான ஆடைகளை அணிந்து கொண்டு ஆட முடியாது என்று திரும்பியும் வந்திருக்கிறார்கள். எதையுமே உடனே கூற மாட்டார்கள். நீண்ட தூரம் அழைத்துச் சென்று படப்பிடிப்பு தளத்தில் வைத்துதான் இப்படியான விஷயங்களை கூறுவார்கள் என, சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார் நடிகை அர்ச்சனா.