” நைட் நேரத்தில் ஹாட் வாட்டரில் திரிபலா குடியுங்க..!” – 100% நன்மைகள அள்ளுங்க..!!

பலவிதமான நன்மைகளைக் கொண்டிருக்கும் திரிபலா மூன்று பொருட்களின் சங்கமம். ஆயுர்வேத மருந்துகளில் அதிக அளவு பரிந்துரைக்கப்படும் இந்த திரி பலா சூரணத்தை இரவில் நீங்கள் சுடு நீரில் குடிப்பதன் மூலம் எண்ணற்ற நன்மைகளை பெறலாம்.

👍 இயற்கை மலமிளக்கியாக செயல்படும் இந்த திரிபலா சூரணத்தை இரவில் நீங்கள் குடிப்பதின் மூலம் உங்களுக்கு இருக்கும் மலச்சிக்கல் நீங்கி காலை நேரத்தில் மிக எளிதாக நீங்கள் மலம் கழிக்க முடியும்.

👍 உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இனிதனை இரவு நேரத்தில் குடிப்பதன் மூலம் உடலில் இருக்கக்கூடிய வேண்டாத கழிவுகளை மிக எளிதில் நீக்கி விடுவதால் செரிமான பிரச்சனைகளையும் சரி செய்து உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

👍 உங்கள் பார்வை சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் க்ளாகோமா,கான்ஜுன்க்டிவிடிஸ்,  கண்புரை போன்ற கண் நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்க அருமருந்தாக பயன்படுகிறது.

👍  திரிபலாவில் இருக்கின்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் தோல் தொற்றுக்களை களைவதில் முக்கிய பங்காற்றுகிறது முகப்பரு சருமத்தில் ஏற்படக்கூடிய ஒவ்வாமை போன்றவற்றை குறைப்பதோடு மட்டுமல்லாமல் பாக்டீரியாக்களை எதிர்க்கக்கூடிய ஆற்றலை பெற்றிருப்பதால் சருமத்திற்கு மெருகேற்றக்கூடிய பணியை இது செய்கிறது.

--Advertisement--

👍 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவு கூடிய எந்த திரிபலாவில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுவதால் இரவில் நீங்கள் இதை கட்டாயம் பருகலாம்.

👍 உடலில் ஏற்படக்கூடிய புண்களை எளிதில் ஆற்றக்கூடிய சக்தி படைத்த திரிபலா தொண்டைப்புண் வாய்ப்புண் போன்றவற்றை அகற்றுவதிலும் நல்ல பணியை செய்கிறது.

👍 உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பான hdl-லை அதிகரிக்க கூடிய சக்தி இந்த திரிபலா சூரணத்துக்கு உள்ளதால் இது உடலில் இருக்கும் கொட்ட கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கக்கூடிய பணியை செய்கிறது.

👍பல் பிரச்சனையால் உங்களுக்கு வலி ஏற்பட்டால் அதற்கு மிகச் சிறந்த நிவாரணையாக இந்த திரிபலா சூரணம் விளங்குகிறது. பற்களில் ஏற்படக்கூடிய அலர்ஜி மற்றும் பூஞ்சை தொட்டுகளை நீக்கக்கூடிய தன்மை கொண்டிருப்பதால் பல் பிரச்சனைகளை இது தடுக்கிறது.