“ப்பா.. மனசு பெசயுதே..” – பால்கோவா சிலை போல குத்த வைத்து கவந்திழுக்கும் பாவனா..!

தமிழ் சினிமாவில் அழகான நடிகைகளில் ஒருவர் பாவனா. மலையாள படவுலகில் தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகைகளில் இவரும் முக்கியமானவர். அசல், ஜெயம் கொண்ணடான்.,வாழ்த்துகள், ஆரியா, ராமேஸ்வரம், தீபாவளி, கூடல் நகர், வெயில், கிழக்கு கடற்கரை சாலை, சித்திரம் பேசுதடி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாவனா.

மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் ஹீரோயினாக நடித்ததால், முதல் படத்திலேயே இவர் பலரது கவனத்தை ஈர்த்தார். வெயில், கூடல் நகரம் படமும் இவருக்கு, நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. ஜெயம் ரவியுடன் தீபாவளி படம், இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் செம ஹிட் அடித்தன. மற்ற படங்களிலும் பாவனா நடிப்பு பாராட்டும் வகையில் அமைந்திருந்தன.

இதற்கிடையில், மலையாள நடிகர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் சிலர், இவரை காரில் கடத்திச்சென்று பாலியல் சீண்டல் செய்ததாக ஒரு புகார் கிளம்பியது. இதில், பிரபல மலையாள நடிகர் ஒருவரது பெயரும், அவருடன் நெருங்கிப் பழகிய மற்றொரு நடிகையின் பெயரும் அடிபட்டது. பாவனாவுக்கு நடந்த கொடுமை குறித்து, கேரளாவில் பெண் அமைப்புகள், மாதர் சங்கங்கள் சில போராட்டம் நடத்தியது, பரபரப்பை ஏற்படுத்தியது.இளம்பெண் பாவனா, ஒரு நடிகையாக இருந்தாலும் தனக்கு நேர்ந்த கொடுமையால், சில காலம் படத்தில் நடிப்பதை தவிர்த்தார். பலரும் அவருக்கு ஆறுதல் கூறி தேற்றினர்.

கடந்தாண்டு, துபாய் அரசு நடிகை பாவனுக்கு கோல்டன் விசா வழங்கியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாவனா, மேலாடை எதுவுமே அணியாத நிலையில், சால்வை போன்ற ஒன்றை போர்த்தியபடி வந்திருக்கிறார். உள்ளே உடலின் பாகங்கள் அனைத்தும் அப்பட்டமாக தெரிய, ரசிகர்களின் பலத்த கண்டனங்களுக்கு பாவனா ஆளானாா். நெட்டிசன்கள் கமெண்டுகளால் வறுத்து எடுத்து விட்டனர். ஆனால், உடம்பின் மேல், கோல்டு கலரில் ஸ்கின் போன்ற ஒரு ஆடை அணிந்திருந்தேன் என,பாவனா சொல்லியும், அதை ரசிகர்கள் ஏற்றுறுக்கொள்ளவில்லை.

துபாய் அரசின் இந்த கோல்டன் விசா நடிகர் கமல்ஹாசன், அ்மலாபால் போன்றோருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் பாவனா நடித்த படங்களின் எண்ணிக்கை சொற்பமாகவே இருந்தாலும், அவரது நடிப்பும், அழகும் ரசிகர்களின் மனதில் நிலைத்து விட்டது. பாவனா தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிக பிடித்தமான நடிகைகளில் ஒருவராக இருப்பதால், அவரது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு குறையவில்லை. மீண்டும் தமிழ் சினிமாவில் பாவனாவை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அவர்களது ஆசை நிறைவேறுமா, என காத்திருந்து பார்ப்போம். அதுவரை, வைரலாகும் அவரது புகைப்படங்களை ரசிக்கும் ஆர்வத்தில், ரசிகர்கள் உள்ளனர்.

--Advertisement--