ஒரு பொண்ணுக்கு வரக்கூடாத பிரச்சனை..அவரு சொன்னதுக்காக.. நடிகை புவனேஸ்வரி வேதனை..!

ஒரு பொண்ணுக்கு வரக்கூடாத பிரச்சனை..அவரு சொன்னதுக்காக.. நடிகை புவனேஸ்வரி வேதனை..!

சீரியல் நடிகையாவும், சினிமா நடிகையாகவும் மக்கள் மத்தியில் மிக பிரபலமானவர் நடிகை புவனேஸ்வரி.

புவனேஸ்வரி

ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில், விடலை பையன்களாகிய சித்தார்த், பரத், நகுல், மணிகண்டன், தமன் ஆகியோர், தங்கள் சந்தோஷத்துக்காக வீட்டுக்கு அழைத்து வரும் விலைமாது கேரக்டரில் நடித்திருப்பார் புவனேஸ்வரி.

அந்த காட்சியில் நடித்த வகையில் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார் புவனேஸ்வரி. அதன்பிறகு வடிவேலு, விவேக் போன்றவர்களுடன் சில படங்களில் காமெடி காட்சிகளிலும் அவர் நடித்திருந்தார்.

சீரியல் நடிகை

கடந்த 2005ம் ஆண்டில் பாசமலர் என்ற சீரியலில் நடித்து அறிமுகமானவர் புவனேஸ்வரி. தொடர்ந்து தீபம், சித்தி, சந்திரலேகா உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தார். பெரும்பாலும் சீரியல்களில் இவர் வில்லி கேரக்டரில்தான் அதிகமாக நடித்தார்.

--Advertisement--

சினிமாவிலும், சீரியல்களிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த அவர், அரசியலிலும் ஆர்வம் காட்டினார். இந்நிலையில் அவர் விபச்சார வழக்கு ஒன்றில் கைதானார். அதன்பிறகு அவரது பட வாய்ப்புகள், சீரியல் வாய்ப்புகள் முற்றிலுமாக குறைந்து போனது.

இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு முன் அவர் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசிய வீடியோ, இப்போது வைரலாகி வருகிறது. அதில் புவனேஸ்வரி கூறியிருப்பதாவது,

நான் சீரியலில் நடித்துக்கொண்டிந்த போது பாய்ஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஷங்கர் படம் என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், அந்த கேரக்டரில் நடிப்பது தயக்கமாக இருந்தது.

டைரக்டர் ஷங்கர்

படத்தின் கதைப்படி 5 மாணவர்கள் தவறான வழியில் செல்ல நினைக்கின்றனர். ஆனால் அவர்கள் உன்னிடம் தவறாக நடந்துக்கொள்வது போல காட்சி இல்லை என்று டைரக்டர் ஷங்கர் சொன்ன பிறகுதான் அதில் நடித்தேன். சின்ன சீனாக இருந்தாலும், நல்ல அறிமுகத்தை அந்த படம் கொடுத்தது.

நான் சினிமா பின்புலம் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தவள். முதலில் விளம்பரங்களில் நடித்தேன். அதை பார்த்துதான் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து பல சீரியல்களில் நடித்தேன். அப்போதுதான் ஒவ்வொரு பிரச்னையாக எனக்கு வந்தது.

இதையும் படியுங்கள்: “போதையில் மிருணாளினி ரவி..” ஏசு கிறிஸ்துவை இழுத்து சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஜய் ஆண்டனி..

வரக்கூடாத பிரச்னை எல்லாம்…

நடிக்க வரும்வரை எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்த எனக்கு, நடிகையான பிறகு ஒரு பெண்ணுக்கு வரும் பிரச்னைகள் குறித்து பிறகுதான் தெரிந்துக்கொண்டேன். வரக்கூடாத பிரச்னை எல்லாம் வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்தது. எல்லா துறைகளிலும் பிரச்னை இருந்தாலும், சினிமாவில் மட்டும் இவள் இப்படித்தான் என்ற முத்திரையை குத்தி விடுவார்கள்.

அரசியல்வாதிகள், அதிகாரிகள் காரணம்

எனக்கு இந்த பிரச்னைகளில் யாருடைய சப்போர்ட்டும் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் என் குடும்பத்தினர் மட்டுமே எனக்கு பக்கபலமாக இருந்தார்கள். இதனால்தான் நான் பெரிய பிரச்னைகளில் இருந்து வெளியே வர முடிந்தது. இதற்கு என்னை பிடிக்காத என் வளர்ச்சி பிடிக்காத சில அரசியல்வாதிகள், சில அரசு அதிகாரிகள்தான் காரணம்.

இதையும் படியுங்கள்: போக்கிரி படத்தில் வில்லியாக நடிச்ச பிருந்தாவா இது..? அடையாளமே தெரியலையே.. இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..

எல்லா பெண்களுக்கும் குடும்ப வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் குடும்ப வாழ்க்கை என சரியாக அமையவில்லை. எனக்கு மகன் இருக்கிறான். அவன்தான் எனக்கு மிகப்பெரிய சப்போர்ட் ஆக இருக்கிறான்.

பத்திரிகைகளில் தவறான செய்திகள்

தன் தாயை பற்றி, பத்திரிகைகளில் தவறான செய்திகள் வரும்போது ஒரு மகனாக அவன் எவ்வளவு வருத்தப்பட்டிருப்பான் என்பதை, ஒரு தாயாக நானும் உணர்ந்திருக்கிறேன் என்று அந்த நேர்காணலில் புவனேஸ்வரி பேசியிருக்கிறார்.

ஒரு பொண்ணுக்கு வரக்கூடாத பிரச்சனை நான் சந்தித்து இருக்கிறேன். டைரக்டர் ஷங்கர் சொன்னதுக்காக பாய்ஸ் படத்தில், அந்த கேரக்டரில் நடித்தேன் என நடிகை புவனேஸ்வரி தன் வாழ்வில் நடந்த வேதனைகளை அந்த நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்.