ஆடையின்றி இருக்கும் புகைப்படத்தை கேட்ட ரசிகர்..! கோபப்படாமல் சின்மயி கொடுத்த பதில்..!

ஆடையின்றி இருக்கும் புகைப்படத்தை கேட்ட ரசிகர்..! கோபப்படாமல் சின்மயி கொடுத்த பதில்..!

திரை உலகில் பின்னணி பாடகியாக திகழும் சின்மயி ஸ்ரீபதா ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் வெளி வந்த கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடலை பாடி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டவர்.

நெட்டிசன் ஆசை..

இதனை அடுத்து பல திரைப்படங்களில் பின்னணி பாடி இருக்கும் இவர் எனக்கும் உனக்கும், பாய்ஸ், அறிந்தும் அறியாமலும், சண்டைக்கோழி போன்ற படங்களில் சிறப்பாக பின்னணி பாடல்களை பாடி இருக்கிறார்.

இதனை அடுத்து இவர் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

தொலைக்காட்சி மட்டுமல்லாமல் வானொலி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி இருக்கக்கூடிய இவர் தனி திறன் கொண்ட குரலினை கொண்டிருக்கிறார். இதனை எடுத்து ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் பல பாடல்களை பாடி இருக்கிறார்.

மீ டு விவகாரம் பற்றி சர்ச்சைகள் ஏற்பட்ட போது மிகவும் தைரியமாக பாடல் ஆசிரியர் வைரமுத்து பற்றிய உண்மை முகத்தை கிழித்து காட்டி பலர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் படுபிசியாக இருக்க கூடிய இவரிடம் அத்து மீறக்கூடிய சில ரசிகர்கள் வேண்டாத கேள்விகளை இணையங்களின் வழியாக கேட்டு விடுகிறார்கள். அந்த வகையில் இணையத்தில் ஒரு நெட்டிசன் தனது ஆசையை பதிவு செய்ததை அடுத்து தக்க பதிலடியை சின்மயி கொடுத்திருக்கிறார்.

சின்மயி பதிலடி..

அண்மையில் இவர் தாய்ப்பால் ஊட்டும் போட்டோக்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளி வந்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கலாம்.

அந்த வகையில் தான் தற்போது சின்மயிடம் நெட்டிசன் ஒருவர் சின்மயி ஆடையின்றி இருக்கும் புகைப்படத்தை இணையம் வழியாக கேட்டிருக்கிறார். இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பாராத பாடகி சின்மயி அவருக்கு தக்க பதிலடி தந்திருக்கிறார்.

வரம்பு மீறி கேட்கப்பட்ட கேள்விக்கு கடுப்பான சின்மயி நீங்கள் கேட்பது மிகவும் தவறானது இதற்கு பதிலாக நீங்கள் சுய இ**ம் செய்துவிட்டு போய்விடலாம் என்று நச் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த பதிலடியை பார்த்து வரும் ரசிகர்கள் சின்மயி கொடுத்த பதிலடி மிகவும் சிறப்பான பதிலடி என்ற ரீதியில் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். மேலும் இது போன்ற கேள்விகளை பெண்களிடம் கேட்பது தவறானது என்பதை எப்போது உணர்வார்கள் என்ற ரீதியில் அவர்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

எனவே இணையத்தில் இது போன்ற கேள்விகளை கேட்பதை விடுத்து விட்டு ஆக்கபூர்வமான கேள்விகளை கேட்டால் அறிவாவது வளரும். அதை விடுத்து மடைத்தனமாக இப்படி கேட்பதால் என்ன தான் இவர்களுக்கு கிடைக்குமோ தெரியவில்லை.

திரைப்படங்களுக்கு எப்படி சென்சார் போர்டு உள்ளதோ, அதுபோல சமூக வலைதளங்களுக்கும் சென்சார் போர்ட் கொண்டு வர வேண்டுமா? என்பது போன்ற எண்ணங்களை இது போன்ற கேள்விகள் உருவாக்கி உள்ளது என கூறலாம்.

சமூக வலைதளத்தில் வேண்டியதை மட்டும் செய்ய வேண்டும் வேண்டாததை விட்டு ஒழித்தால் அனைவருக்கும் நன்மை ஏற்படும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வது நலம் தரும்.

   

--Advertisement--