பூ நடிகையின் காதலில் விழுந்த சிவகார்த்திகேயன்..! குழப்பத்தை ஏற்படுத்திய தனுஷ்..!

இன்று தமிழ் திரை உலகில் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் மிகப்பெரிய நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆரம்பகட்டத்தில் இவர்கள் இருவருமே மிகச் சிறந்த நண்பர்களாக விளங்கினார்கள் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.

இந்த நிலையில் வரும் பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் ரிலீஸ் ஆக இருப்பதை அடுத்து அவர்களது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்த வேளையில் இவர்கள் பற்றிய சில வீடியோக்கள் தற்போது இணையத்தில் பரவி ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்த விஷயமானது சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிவகார்த்திகேயனும் நடிகர் தனுஷம், டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தனுஷ் மரியான் மிகப்பெரிய படம் ஆனால் அந்த படத்தில் சிவகார்த்திகேயன் பெயரை மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கிறேன். தந்தை பெயரும் மகன் பெயரும் கொண்ட நடிகர் பூ நடிகையுடன் காதலா? எனத்தான் மரியான் படத்தில் பேசியது சிவகார்த்திகேயனை பற்றி என்று விளையாட்டாக கூறினார்.

உடனே இதை உண்மை என்று நம்பிக்கொண்ட டிடி யார் அந்த பூ நடிகை என்று கேட்க அது மரியான் படத்தில் நடித்த நடிகை தான் என்று கிண்டலாக சிவகார்த்திகேயனை பேசி இருந்தார். அது மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் மீது எனக்கு எப்போதும் கோபம் வராது என்று கூறியதை அடுத்து, அந்த நடிகை யாரும் கிடையாது மேலும் எந்த நடிகையும் கூற முடியாது என்று கூறினார்.

தற்போது சிவகார்த்திகேயனுக்கும், இமானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து அவரது பெயர் ரிப்பேராகக் கூடிய வகையில் பலவிதமான விஷயங்களும் இணையங்களில் பகிரப்பட்டு அவரது பெயர் டேமேஜ் ஆகி உள்ள நிலையில் அவர் இதற்கான எந்த விளக்கத்தையும் இதுவரை அளிக்கவில்லை அளிக்கவில்லை.

இதனை அடுத்து ரசிகர்கள் அந்த நடிகை வேறு யாரும் இல்லை நடிகை பார்வதி நாயர் தான் என்று கூறி வருகின்ற விஷயம் தான் தற்போது வைரலாக ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

   

--Advertisement--