கோர்ட் கேசுகளில் நீங்கள் வெல்ல வேண்டுமா? 31 தீப பரிகாரம் ஒன்றே போதும்..!

இன்றும் அங்காளி, பங்காளிகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டு அவர்கள் சொத்து பரிமாற்றத்தில் பல சிக்கல்கள் ஏற்படும். அது மட்டுமல்லாமல் தொட்டது 90க்கும் உடனடியாக கோர்ட் வாயிலை மிதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

இவர்கள் போடும் வழக்கு இவர்கள் வாழ்நாள் முடிந்தாலும், சரியான தீர்ப்பு கிடைக்காமல் வீட்டுக்கும் கோர்ட்டுக்கும் அலைவதிலேயே ஆயுள் முடிந்து விடுகிறது.

இப்படி கோர்ட்டு கேசுகளில் நீங்கள் சிக்கி இருந்தால் வழக்கு உங்களுக்கு சாதகமாக வந்து, உங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்க இந்த பரிகாரத்தை நீங்கள் செய்தால் போதும் நிச்சயமாக நீங்கள் போட்ட வழக்குகளில் வெற்றி பெறலாம்.

வழக்குகளில் வெற்றி பெற உதவும் பரிகாரம்

நீங்கள் வழக்குகளில் வெற்றியை பெற வேண்டுமெனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 6:00 மணி முதல் 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து விட வேண்டும். அப்போது தான் அது உங்களுக்கு நல்ல பலனை அளிக்கும்.

இதற்காக அதிகாலை ஆறு மணிக்கு முன்பே எழுந்து குளித்துவிட்டு உங்கள் பூஜை அறையில் 31 தீபங்களை நீங்கள் ஏற்றுவதோடு விநாயகர் அகவல் படிப்பது அவசியமான ஒன்றாகும்.

--Advertisement--

மேலும் மிகவும் நெருக்கடியான காலகட்டமாக இருக்கும் போது நீங்கள் ஞாயிற்றுக்கிழமை அல்லாத நாட்களிலும் 108 நெய் தீபங்கள் ஏற்றி கோளறு பதிகம் சஷ்டி கவசம் போன்றவற்றை படிப்பதின் மூலம் வழக்குகளில் இருக்கக்கூடிய தன்மைகளுக்கு ஏற்ப உங்களது பாதிப்புகள் படிப்படியாக குறைந்து உங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.

இன்று விட்டுக்கொடுத்து போகும் மனப்பக்குவம் பெருமளவு குறைந்துவிட்டது. அது மட்டுமல்லாமல் உறவுகளின் அவசியத்தை உணராமல் பணத்திற்காகவே நித்தமும் உழைக்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால் நித்தமும் கோர்ட் கேஸ் என்று அனைவரும் அலைய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.

எனவே இதனை தவிர்க்க நீங்கள் முயற்சி செய்யுங்கள். அப்படி இல்லை என்றால் நம்பிக்கையோடு கட்டாயம் நீங்கள் உங்கள் வீட்டில் இதை செய்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு கை மேல் பலன் கிடைக்கும்.