ஆணுறை உபயோக்கிக்கும் முன் இதை உறுதி செய்ய வேண்டும்.. வெளிப்படையாக கூறிய இலியானா..!

நடிகை இலியானா சமீபத்திய பேட்டி ஒன்று ஆணுறை உபயோகப்படுத்தும் முன்பு ஒரு விஷயத்தை உறுதி செய்ய வேண்டும் என்று வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார். அவர் என்ன கூறினார்..? என்று வாருங்கள் பார்க்கலாம்.

நடிகை இலியானா தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானார். அதன் பிறகு இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் கூட தெலுங்கு படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களை கவர்ந்தார்.

இவருடைய கிளாமரான வீடியோக்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் வைரலானது. இதனால் இவருக்கு ரசிகர் பட்டாளமும் பெருகியது. இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 3 இடியட்ஸ் திரைப்படத்தின் ரீமேக்கான நடிகர் விஜய் நடிப்பில் உருவான நண்பன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு, திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கி இருந்தார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவரை காதலித்து அவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர் அவருக்கும் எனக்கும் கணவன் மனைவிக்குள் நடக்கும் அனைத்துமே நடந்து விட்டது. இன்னும் குழந்தை பெற்றுக் கொள்வது மட்டும்தான் பாக்கி.

அதை பற்றி நாங்கள் தற்போது யோசிக்கவில்லை என்று கூறியிருந்தார். ஆனால், திடீரென அவரை தெரிந்தபிரிந்து விட்டார் நடிகை இலியானா. இந்நிலையில் தற்பொழுது மீண்டும் ஒரு குழந்தைக்கு தாயாகியிருக்கிறார். ஆனால், இன்னும் திருமணம் நடக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆணுறை மற்றும் அதன் அவசியம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்ட நடிகை இலியானா குறிப்பாக ஒரு விஷயத்தை கூறியிருந்தார்.

அதாவது ஆணுறை உபயோகிப்பது பால்வினை நோய்களை தடுப்பதற்கு தேவையற்ற கர்ப்பத்தை தடுக்கவும் தான் அப்படி இருக்கும் பொழுது ஆணுறைகள் ஆணுறையை பயன்படுத்தும் முன்பு ஆணுறை பாக்கெட்டுகள் கிழியாமல், ஓட்டை இல்லாமல் இருக்கிறதா என்பதை ஒரு முறை பரிசோதித்துக் கொள்வது சிறப்பு.

ஏனென்றால் தயாரிப்பின் பொழுது ஏற்படும் சில தவறுகள் காரணமாக ஆணுறை பாக்கெட்டுகள் கிழிந்து அல்லது ஓட்டையாகிவிடவோ வாய்ப்பு இருக்கிறது. எனவே, அதனை அணியும் முன்பு ஆணுறை பாக்கெட்டில் எந்த சேதமும் இல்லை என்பதை உறுதி படுத்த வேண்டும். இது சிறப்பான பாதுகாப்பான உடலுறவுக்கு வழியாக அமையும் என பேசி இருக்கிறார் நடிகை இலியானா.