500 சவரன் நகை – 5 STAR ஹோட்டல்.. ராதா மகளுக்கு வரதட்சணை இத்தனை கோடியா..?

நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் திருமணத்திற்கு 500 சவரன் தங்க நகை மற்றும் விலை உயர்ந்த கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்திருக்கிறார்.

நடிகை ராதாவின் மூத்த மகளான கார்த்திகா சமீபத்தில் ரோஹித் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது.

திருவனந்தபுரத்தில் நடந்த இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் மற்றும் நடிகை ராதாவின் குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டனர். நடிகை ராதாவின் மகள் தமிழில் நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குனர் கே.வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான கோ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்த நடிகர் சிம்பு, நடிகை கார்த்திகா நாயரை நீக்கி விட்டு வேறு ஒருவரை ஹீரோயினாக்க வேண்டும்.. அப்போதுதான் நான் படத்தில் நடிப்பேன் என இயக்குனர் கே.வி ஆனந்திடம் கேட்டிருக்கிறார்.

இதனை கேட்ட இயக்குனர் இந்த ஹீரோயினை மாற்ற முடியாது என்று நடிகர் சிம்புவை இந்த படத்திலிருந்து நீக்கிவிட்டு திடீரென நடிகர் ஜீவாவை இந்த படத்தில் ஹீரோவாக ஒப்பந்தம் செய்து விட்டார் என்பது தனிக்கதை.

--Advertisement--

இந்த திரைப்படம் நடிகை கார்த்திகா நாயருக்கு வெற்றி படமாக அமைந்தது. ஆனாலும், தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, தன்னுடைய அப்பாவின் ஹோட்டலை நிர்வாகம் செய்து கொண்டிருந்தார் நடிகை கார்த்திகா நாயர்.

இந்நிலையில், கார்த்திகாவும் ரோகித் மேனன் என்பவருக்கும் கேரளாவில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. நடிகை ராதா பல ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.

சினிமாவில் சம்பாதித்த பணம் முழுதையும் அவருடைய நட்சத்திர ஹோட்டலில் தான் முதலீடு செய்து வைத்திருக்கிறார். மட்டுமில்லாமல் பல்வேறு இடங்களில் நிலமாகவும் வாங்கி குவித்து வைத்திருக்கிறார்.

80களிலேயே குறைவான விலைக்கு பல சொத்துக்களை வாங்கி வைத்திருந்தார் நடிகை ராதா ஆனால் அந்த சொத்துக்கள் தற்பொழுது கோடிகளில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், தன்னுடைய மூத்த மகளுக்கு 50 சவரன் நகை, விலை உயர்ந்த கார் மற்றும் பணம் என வரதட்சனை கொடுத்து திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

கார்த்திகாவின் கணவர் ரோகித் மிகப்பெரிய தொழிலதிபர் என்றும் அவருடைய சொத்து நிச்சயம் 500 கோடி தாண்டும் என்றும் விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றனர் என பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய சமீபத்திய வீடியோ ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.