விஜய்யின் முதல் காதலி யாருன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்… குண்டை தூக்கி போட்ட நடிகை கௌசல்யா..!

விஜய்யின் முதல் காதலி யாருன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்… குண்டை தூக்கி போட்ட நடிகை கௌசல்யா..!

தமிழ் சினிமாவில் முக்கியமான கதாநாயகியாக 1990களில் வலம் வந்தவர் நடிகை கௌசல்யா. பல வெற்றிப் படங்களில் நடித்தவர் கௌசல்யா.

குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். பெங்களூருவைச் சேர்ந்த இவரது இயற்பெயர் நந்தினி.

கடந்த 1996ம் ஆண்டில் மலையாளத்தில் வெளியான ஏப்ரல் 19 தான் கௌசல்யாவின் முதல் படம். அதே ஆண்டில் தமிழில் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

நடிகர் கார்த்திக் உடன் பூவேலி என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார் கௌசல்யா என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் அடுத்து, நேருக்கு நேர் என்ற படத்தில் விஜயுடன் ஜோடியாக நடித்தார். பிரியமுடன், உன்னுடன், ஆசையில் ஓர் கடிதம், வானத்தை போல, ஏழையின் சிரிப்பில், ராஜகாளியம்மன், சந்தித்த வேளை என பல படங்களில் நடித்துள்ளார்.

கௌசல்யா..

நடிகை கௌசல்யா நடிக்க வந்த புதிதில் நேருக்கு நேர், பிரியமுடன் ஆகிய படங்களில் நடித்த போது விஜய் அதில் ஹீரோவாக நடித்திருந்தார். அதனால் விஜய்க்கும், கெளசல்யாவுக்கும் நல்ல நட்பு அப்போது இருந்துள்ளது.

விஜயின் முதல் காதலி..

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை கௌசல்யா, படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜயுடன் நான் நிறைய உரையாடி இருக்கிறேன்.

நடிகர் விஜயின் முதல் காதலி யார் என்று முதலில் எனக்குத் தான் தெரியும். கடைசியாக அவரையே தான் நடிகர் விஜய் திருமணமும் செய்து கொண்டார் என கூறியிருக்கிறார் நடிகை கௌசல்யா.


அதாவது நடிகர் விஜயின் முதல் காதலி அவரது மனைவி சங்கீதா தான். கடைசியில் அவரை தான் அவர் திருமணம் செய்துக்கொண்டு இருக்கிறார் என்பதை சஸ்பென்ஸ் போல சொல்லி இருக்கிறார் நடிகை கௌசல்யா.

ஆனால் விஜயின் முதல் காதலி யார் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும் என்று குண்டை தூக்கி போடுவது போல, சஸ்பென்ஸ் வைத்து சொல்லி ரசிகர்களை ஒரு நிமிடம் திடுக்கிடச் செய்திருக்கிறார் நடிகை கௌசல்யா.