நைட் பார்டியில் கண்ணா பின்னா கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ்.. எல்லாமே கிழிஞ்சி தொங்குதே…

மலையாள நடிகைகள் என்றாலே, நல்ல நடிப்பாற்றலும் அழகும் திறமையும் மிக்க நடிகைகளாக தான் இருக்கின்றனர். கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து சாதித்த பல நடிகைகள் உள்ளனர். அந்த வகையில் நடிகை ரேவதி, நதியா, அம்பிகா, ராதா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பலரை உதாரணமாக சொல்லலாம்.

சில நடிகைகள் மலையாளத்தில் இருந்து வந்து, தமிழ் சீரியலில் இன்று ராஜா ராணி பிரவீனா போன்று முக்கிய நடிகைகளாக இருந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகையாக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ்.

சினிமா பின்னணி

கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்ற மலையாள பட தயாரிப்பாளர் மகள்தான் கீர்த்தி சுரேஷ். இவரது அம்மா மேனகாவும் ஒரு பிரபல நடிகைதான்.

--Advertisement--

கடந்த 1980களில் தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் நடித்தவர். குறிப்பாக நெற்றிக்கண் என்ற படத்தில் இரட்டை வேடங்களில் ரஜினி நடித்திருப்பார். அதில் மகன் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

கீர்த்தி சுரேஷின் பாட்டி அதாவது மேனகாவின் அம்மா, கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் கார்த்தியின் அப்பாவாக நடித்த சத்யராஜுக்கு, அம்மாவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி குடும்பமே சினிமா பின்னணி சார்ந்ததாக உள்ள நிலையில், கீர்த்தி சுரேஷ் துவக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்து சில மலையாள படங்களில் நடித்து பிறகு, இளம் நடிகையாக மலையாளம், தமிழில் நடித்து வெற்றி பெற்றார்.

இது என்ன மாயம் அறிமுகம்

தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் அதிகளவில் நடித்து வருகிறார். கடந்த 2013ம் ஆண்டில் கீதாஞ்சலி என்ற மலையாள படத்தில் நடித்து அறிமுகமானார். விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் படத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ரஜினிக்கு தங்கையாக

அண்ணாத்த படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்திருந்தார். நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரி கேரக்டரில் மிக அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி விருது பெற்றார்.

நடிகர் தனுஷூடன் தொடரி படத்திலும், சீயான் விக்ரம் ஜோடியாக சாமி 2 படத்திலும், சிவகார்த்திகேயன் ஜோடியாக ரஜினி முருகன் மற்றும் ரெமோ ஆகிய படங்களிலும், விஜய்க்கு ஜோடியாக பைரவா மற்றும் சர்க்கார், சூரியாவுக்கு ஜோடியாக தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

போலீஸ் அதிகாரி

இப்போது சமீபத்தில் சைரன் 108 என்ற ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த இந்த படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

துவக்கத்தில் நல்ல நடிகையாக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட கீர்த்தி சுரேஷ், ஒரு கட்டத்திற்கு பிறகு கவர்ச்சி நடிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

நைட் பார்ட்டியில்

குறிப்பாக பொது இடங்களில், நைட் பார்ட்டிகளில் அவர் பங்கேற்கும் போது அணிந்திருக்கும் ஆடைகள் மிக மிக கவர்ச்சியாகவும், எல்லை மீறி போய் சில நேரத்தில் மிக ஆபாசமாகவும் இருப்பதாக ரசிகர்களை முகம் சுளிக்கும் அளவிற்கு சென்று விடுகிறார்.

மோசமான ஆடையில்

சமீபத்தில் ஒரு நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷின் மிக மோசமான கவர்ச்சி உடையை பார்த்து, ஒரு நல்ல நடிகை இப்படி மோசமான ஆடையில் வந்து இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது சரிதானா என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நைட் பார்டியில் கன்னாபின்னா கவர்ச்சி உடையில் இருந்த கீர்த்தி சுரேஷை பார்த்து, எல்லாமே இப்படி கிழிஞ்சி தொங்குதே என்றும் கலாய்த்து வருகின்றனர்.