அப்படி மட்டும் போஸ் கொடுக்க மாட்டேன்.. அடம் பிடிக்கும் மிருணாள் தாகூர்.. இது தான் விஷயமாம்..!

ஒரு படத்தில் நடித்தாலும், ரசிகர்களின் மனம் கவர்ந்துவிடும் ஒரு சிறப்பான கேரக்டரில் நடித்து விட்டால் அதுவே அவர்களது அடையாளமாக சினிமா ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்க காரணமாகி விடுகிறது.

மிருணாள் தாகூர்

மராத்தியில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஹலோ நந்தன் என்ற படத்தில் நடித்து, சினிமாவில் அறிமுகமானவர் மிருணாள் தாகூர். தொடர்ந்து விட்டி தண்டு, சுராஜ்யா உள்ளிட்ட மராத்தி மொழி படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து இந்தியில் லவ் சோனியா என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பிறகு கிருத்திக் ரோஷன் நடித்த சூப்பர் 30 என்ற படத்தில் மிருணாள் தாகூர் நடித்தார். பாட்லா ஹவுஸ், கோஸ்ட் ஸ்டோரீஸ், டூஃபேன், தாமாக, ஜெர்ஸி என பல இந்தி படங்களில் நடித்த மிருணாள் தாகூர், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

சீதாராமம்

அதன் பிறகு இந்தியில் பல படங்கள் அவர் நடித்தாலும், அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்த படம் சீதா ராமம் தான். துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில், கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளிவந்த சீதாராமம் படம்தான், மிருணாள் தாகூருக்கு மிகப்பெரிய அடையாளமாக அமைந்தது.

--Advertisement--

அதைத் தொடர்ந்து தெலுங்கில் நானி உடன் அவர் நடித்த, ஹாய் நான்னா படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வெற்றியை பெற்றது. இந்த ஆண்டு விஜய தேவர கொண்டா ரெட்டியுடன், பேமிலி ஸ்டார் என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஆனால் இந்த படம் தோல்வியை தழுவியது. எனினும், அந்தப் படத்தை ரசிகர்கள் கொஞ்சம் ரசித்து பார்க்க காரணமே மிருணாள் தாகூர்தான் என்று பலரும் கூறி வருகின்றனர்.

தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் மிருணாள் தாகூருக்கு சீதா ராமம் படம்தான் ரசிகர் மத்தியில் நல்ல அறிமுகத்தையும், வரவேற்பையும் பெற்றுத் தந்தது.

மும்பையில் ஒரு நிகழ்ச்சியில்…

சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மிருணாள் தாகூர் கலந்து கொண்டார். அப்போது புகைப்படக்காரர்கள் அவரை பலவிதமான போட்டோக்களை எடுத்து தள்ளினர்.

ஆனால் அப்போது புகைப்படக்காரர்கள் பல விதமான ஸ்டில்களை எடுத்த நிலையில்,ஒரு விஷயத்தை மட்டும் செய்ய முடியாது என்று மிருணாள் தாகூர் அதிரடியாக மறுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்ற வீடியோ காட்சிகள் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாப்பரசிகள்

பாப்பரசிகள் என அழைக்கப்படும் புகைப்படக் கலைஞர்கள், மும்பையில் சினிமா பிரபலங்கள் எங்கே சென்றாலும் போட்டோக்களை எடுத்து தள்ளுவார்கள். இப்படி போஸ் குடுங்க, அப்படி போஸ் குடுங்க என்ற நடிகர், நடிகைகளை விதவிதமாக போஸ் கொடுக்க சொல்லி, போட்டோ எடுப்பார்கள்.

பேக் போஸ் கொடுங்க…

இந்நிலையில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில், போட்டோ எடுத்து வந்த அவர்கள், மிருணாள் தாகூரிடம் பேக் போஸ் குடுங்க என்று கேட்டதும், அதற்கு அவர் தர முடியாது என்று மறுத்துவிட்டார்.

ரசிகர்கள் பாராட்டு

பல நடிகைகள் பேக் போஸ் கொடுப்பதை விரும்புவதில்லை என்றாலும், அதை யாரும் வெளிப்படையாக மறுத்ததில்லை, ஆனால் மிருணாள் தாகூர் சொன்னதைப் பார்த்த ரசிகர்கள், கடைசியில் ஒரு நடிகை வாய்திறந்து சொல்லிவிட்டார் என்று பாராட்டி வருகின்றனர். அவர் அப்படி போஸ் கொடுக்க மறுத்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

அப்படி மட்டும் போஸ் கொடுக்க மாட்டேன் என்று மறுக்கும் மிருணாள் தாகூரின் அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.